சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

ஞாயிறு, 28 மார்ச், 2010

காலாவதியான மருந்துகள் - ஆரம்பம் முதல் நேற்றுவரை

சென்னை மூலம் நாட்டில் பரவும் சீன போலி மருந்து

ஜூன் 18, 2009

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரில் ஆப்ரிக்காவில் போலி மருந்து விற்பனை செய்த சீனா, சென்னை துறைமுகம் வழியாக இந்தியாவுக்கும் போலி மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம் சென்னையில் துறைமுக பணியில் இருக்கும் துணை மருந்து கண்காணிப்பாளர் சாந்தி குணசேகரன் என்பவர் மூன்று போலி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து சென்னை துறை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மருந்துகளை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தாவில் இருக்கும் மத்திய அரசின் சோதனை கூடத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து என்வீ டிரக்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு பொறுப்பாளர் ராகேஷ் ஜெயின் கூறுகையில், எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த மருந்து பொருட்கள் எங்களது பெயருக்கு தான் வந்திருக்கிறது என்றாலும், அதை நாங்கள் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. ஒரு மும்பை நிறுவனத்தின் மூலம் தான் பெறுகிறோம். எங்களுக்கு சீன ஏற்றுமதியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் எங்கள் மீது எந்த குற்றமுமி்ல்லை என்றார் அவர்.

ஷீதல் பார்மா நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ் ஷா கூறுகையில், இந்த மருந்துகள் இந்தியா மற்றும் சீன துறைமுகங்களில் சோதனையிட்ட பின்னர் தான் வருகிறது. ஆனால் அதையும் மீறி எப்படி வருகிறது என்பது தெரியவில்லை. எங்களுக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என்றார்.

இது குறித்து குஜராத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர் ஒருவர் கூறுகையி்ல், மருந்து பொருட்களை சிறு தொழிலாக செய்து வரும் நிறுவனங்கள் எதுவும் நேரிடையாக இறக்குமதி செய்வதில்லை. நாங்கள் மும்பையில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறோம். அவர்கள் கொடுக்கும் மூலப்பொருட்களை கொண்டு நாங்கள் மருந்து தயாரிக்கிறோம். அவர்கள் கொடுப்பது போலியாக இருந்தால் பல மருந்து நிறுவனங்களும் போலி மருந்துகளை தயாரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்றார்.

ஸ்வைன் மருந்து 'டமிஃப்ளூ' குழந்தைகளுக்கு அபாயகரமானது!

புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 2009

டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு உள்ள மாத்திரையான டமிஃப்ளூ, குழந்தைகளுக்கு அபாயகரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த மாத்திரை குழந்தைகளுக்கு அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், டமிஃப்ளூவால் பல்வேறு சிக்கல்களை குழந்தைகள் சந்திப்பதாக ஆய்வுகளும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலைக் கொண்டு வரக் கூடிய அபாயமும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜப்பானில், இந்த மாத்திரைகளை உட்கொண்ட நோயாளிகளுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்ததாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.

இதனால்தான் இந்தியாவில் இந்த மாத்திரிகளை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அரசும் கூட இதை தற்போது குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது. சில்லறை விற்பனைக்கும் தடை உள்ளது என்றார்.

இருப்பினும் விரைவில் சில்லறை விற்பனைக்கு டமிஃப்ளூவை திறந்து விட அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது.

போலி மருந்து மாத்திரையால் சிறுமி சாவு

மார்ச் 23, 2010

சென்னையில் காலாவதியான மருந்து மாத்திரைகளை புத்தம் புதிய மருந்து மாத்திரைகள் போல் தயாரித்து விற்றதால் கீர்த்தி தேவ தர்ஷினி என்ற 3 வயது சிறுமி பலியானள்.

காலாவதியான மருந்து, மாத்திரைகள் தீ வைப்பு

மார்ச் 25,2010

சேலத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை, ஓலையில் போட்டு எரித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர். தமிழகத்தில், பரவலாக மருந்து கடைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்வதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. சென்னையில், காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த மேலும் ஏழு பேர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், காலாவதியான மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மருந்து விற்பனையாளர்கள் உஷார் அடைந்துள்ளனர். கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை மூட்டை கட்டி, குவியல் குவியலாக குப்பை தொட்டிகளில் வீசி வருகின்றனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் நகரில், ஏழு மூட்டைகளில், காலாவதியான மருந்து, மாத்திரைகளை கட்டி மர்ம கும்பல் வீசி சென்றுள்ளது. அதில், மூன்று மூட்டைகளில் இருந்த மருந்து, மாத்திரைகளை கீழே கொட்டி, ஓலையை போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளது. மருந்து, மாத்திரைகளின் பெயர் மற்றும் காலாவதியான குறிப்பு கிடைத்து விடக்கூடாது என்பதால், இவ்வாறு எரித்துள்ளனர்.

தகவலறிந்த போலீசார், மூட்டைகளில் இருந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை கைப்பற்றினர். அவற்றை வீசிய மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், நேற்று முன்தினம், மேட்டூர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகிலுள்ள குப்பை வண்டியில், காலாவதியான மருந்து, மாத்திரைகள், காலாவதி தேதி குறிப்பிடாத டானிக், சாம்பிள் மருந்துகள் பெட்டி பெட்டியாக வீசப்பட்டிருந்தது. அதில், பெரும்பாலானவை குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், இருமல், சளி தீர்ப்பதற்கான மருந்துகள். ஈ.எஸ்.ஐ ., (தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம்) சேலம் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் சம்பத்குமார், இவற்றை ஆய்விற்காக எடுத்து சென்றார்.

சில நாட்களுக்கு முன், கோவையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து 500 பாட்டில்களில் இருமல் மருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டது. பெட்டியில் 60 பாட்டில்கள் இருப்பதற்கு பதில், 100 பாட்டில்கள் இருந்ததால், மருந்து கடை உரிமையாளர்கள் சந்தேகமடைந்தனர். இதைதொடர்ந்து, 400 பாட்டில்களை கோவை டீலருக்கு திருப்பி அனுப்பினர். மருந்து ஆய்வாளர்கள் 100 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் குப்பையில் கொட்டப்பட்ட மாத்திரைகள்: 10 ஆண்டுகள் பழையது

மார்ச் 25, 2010

​ சேலத்தில் காலாவதி ஆன மாத்திரைகள் புதன்கிழமை குப்பையில் கொட்டப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒரு கும்பல் காலாவதி ஆன மருந்து,​​ மாத்திரைகளை சேகரித்து,​​ புதியது போல் மாற்றி மருந்து கடைகளில் விற்பனை செய்து வந்தது அண்மையில் ​கண்டுபிடிக்கப்பட்டது.

மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.​ இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் கிடங்குகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து காலாவதி ஆன மருந்துகளை வியாபாரிகள் ஆங்காங்கே கொட்டி ​வருகின்றனர்.​ இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சுபாஸ் சந்திரபோஸ் நகரில் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான காலாவதி ஆன மாத்திரைகள் ​ கிடப்பதை அப்பகுதி மக்கள் புதன்கிழமை காலை கண்டுபிடித்தனர்.​ இது குறித்துஅன்னதானப்பட்டி போலீஸýக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலி,​​ காலாவதி மருந்துகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் பயந்து போன யாரோ சிலர் அனாசின்,​​ புளுகிளாக்ஸ்-500,​ போஸ்-40,​ காஸ்காக்ஸ்,​​ டிரோபிள்,​​ சிபோ,​​ மூவன் போன்ற பெயர் கொண்ட மூன்று மூட்டை மாத்திரைகளை இரவில் கொண்டு வந்து மக்கள் நடமாட்டம் குறைவான இப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதன் அருகில் இரண்டு இடங்களில் தனித் தனியாக உதிரி கேப்சூல்கள்,​​ மாத்திரைகள்,​​ களிம்பு மருந்துகள் கிடந்தன.​ இவை யாவும் 1991,​ 1998,​ ​ 2001,​ 2003 ஆகிய ​ஆண்டுகளிலேயே காலாவதி ஆகிவிட்டவை என்பது அதன் மேல் உறைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவற்றை இவ்வளவு நாள்களாக வைத்து வியாபாரம் செய்துள்ள மர்ம நபர்கள் அதிகாரிகளுக்கு பயந்து இப்போது இங்கு வந்து போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அங்கிருந்த ஏ.ஐ.டி.யு.சி.​ நிர்வாகி விமலன் தெரிவித்தார்.​ மாத்திரைகள் கொட்டப்பட்டு இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜதுரை,​​ இந்திரா மற்றும் போலீஸôர் அவற்றை மூட்டை கட்டி ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.​ மேலும் அங்கிருந்த உதிரி மாத்திரைகளை தீ வைத்து போலீஸôர் எரித்தனர்.​

போலி மருந்து இல்லை:​ சேலம் மண்டலத்தில் போலி மருந்து,​​ மாத்திரைகள்இல்லை என்று மருந்து கட்டுப்பாடு துணை இயக்குநர் செல்வராஜ் தெரிவித்தார்.

​ இது குறித்து மேலும் அவர் கூறியது:​ போலி மருந்துகள்,​​ காலாவதி மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதால் பயந்து போன சிலர் தங்கள் கைவசம் இருந்த காலாவதியான மருந்து,​​ மாத்திரைகளை மேட்டூர்,​​ சீலநாயக்கன்பட்டியில் ​கொட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த இரண்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.​ ஒருவர் மேட்டூரிலும்,​​ மற்றொருவர் சீலநாயக்கன்பட்டியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.


போ‌லி மரு‌ந்து: ‌‌ம‌க்க‌ள் ‌பீ‌தியடைய வே‌ண்டா‌ம் என அரசு வே‌ண்டுகோ‌ள்

மார்ச் 25, 2010

எ‌‌ல்லா மரு‌ந்து கடைக‌ளிலு‌ம் ‌வி‌ற்கு‌ம் மரு‌ந்துக‌ளு‌ம் போ‌லியானவை அ‌ல்ல எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த மக்கள் நல்வா‌‌ழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ், இதனா‌ல் பொதும‌க்‌க‌ள் ‌பீ‌தி அடைய வே‌ண்டா‌ம் எ‌ன்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய போது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அவ‌ர், காலாவ‌தியான தே‌தியை பெ‌ரிய எழு‌த்த‌ி‌ல் அ‌ச்‌சிட மரு‌ந்து உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ளிட‌ம் வ‌லியுறு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

மரு‌ந்து வா‌ங்கு‌ம்போது தே‌தி முடி‌‌ந்து‌ள்ளதா எ‌ன்பதை பொதும‌க்க‌ள் பா‌ர்‌த்து வா‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றிய சு‌ப்புரா‌ஜ், கடைக‌ளி‌ல் காலாவ‌தியான மரு‌ந்து வை‌த்‌திரு‌ந்தா‌ல் கு‌ற்றம‌ல்ல, இதனை ‌வி‌ற்பனை செ‌ய்ய‌க்கூடாது எ‌ன்றா‌ர்.


கூடுதலாக மரு‌ந்து க‌ட்டு‌ப்பா‌ட்டு ஆ‌‌ய்வாள‌ர்களை ‌நிய‌மி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், செ‌ன்னை‌யி‌ல் காலாவ‌தியான மரு‌ந்துகளை வ‌ி‌ற்பனை செ‌ய்த கு‌ம்பலை ‌பிடி‌க்க காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர‌ முய‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர் எ‌ன்றா‌ர்.

போலீஸ் ரெய்டு எதிரொலி: வேலூர், நெல்லையில் போலி மருந்துகள் எரிப்பு!

மார்ச் 25, 2010

சென்னை: காலாவதியான மருந்துகள் புதுப்பித்து விற்கப்படும் மோசடி அம்பலமானதை அடுத்து தமிழகம் முழுவதும் பல நகரங்களிலும் மருந்து கடை மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக வேலூர் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் பல லட்சம் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இவற்றை எரித்தவர்கள் யார் என கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத்திரை மற்றும் மருந்துகளின் காலாவதி தேதியை அழித்துவிட்டு போலியாக புதிய தேதி அச்சிட்டு ஆபத்தான வகையில் மோசடி விற்பனை சென்னையில் நடந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

காலாவதியான மருந்து மாத்திரைகளை கொடுங்கையூர் குப்பையில் இருந்து சேகரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கோயம்பேட்டில் இதெற்கென தனி தொழிற்சாலை நடத்தி வந்த மீனா ஹெல்த்கேர் என்ற மருந்து நிறுவனத்தையும் போலீசார் சுற்றிவளைத்து சீல் வைத்தனர்.

ஆனால், மருந்து நிறுவனத்தின் உரிமையாளர்களான மீனாட்சி சுந்தரம், பிரதீப் சோர்டியா உட்பட நிர்வாகிகள் தப்பியோடி விட்டனர்.

காலாவதி மருந்துகளை வண்டியில் ஏற்றிவந்த டிரைவர் வெங்கடேசன் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவி என்ற இருவர் மட்டும் போலீசிடம் நேற்று சரணடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில், மருந்து நிறுவன அதிபர்களில் ஒருவரான பிரதீப் சோர்டியாவை போலீசார் கைது செய்தனர்.

காலாவதியான மருந்து விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த இவரை போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னையில் இம்மோசடி விவகாரம் வெடித்த உடனடியாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற கும்பல் இருந்தால் கண்டுபிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருந்து நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பல இடங்களில் பீதியடைந்த மருந்து கடைக்காரர்கள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் உள்ள காலாவதி மருந்துகள் அனைத்தையும் குப்பையில் கொட்டியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.

வேலூரில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் நகரின் பல்வேறு இடங்களில் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் போலி மருந்துகள் என தெரியவந்துள்ளது. வேலூர் எல்.ஐ.சி. காலணி, வேலூர் பைபாஸ் சாலை, பாலாற்றங்கரை என மூன்று இடத்தில் போலி மருந்துகளை கொட்டி எரிந்துள்ளனர்.

இன்று காலை அவை பாதி எரிந்தும், எரியாமலும் கிடந்தை போலீசார் கண்டுபிடித்தனர். போலி மருந்துகளை எரித்தது யார் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலி மருந்துகள் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், எரித்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதேபோல் நெல்லையிலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் ரோடடில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை ஜங்ஷன் பெருமாள் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி பகுதிகளில் மருந்து மொத்த விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்படுவதை அறிந்த விற்பனையாளர்கள் காலாவதியான மருந்துகளை தெருவில் கொட்டியுள்ளனர்.

பெட்டி, பெட்டியாக மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள், டானிக்குகள் கொட்டப்பட்டுள்ளன. பெரும்பாலானவை 2009ம் ஆண்டு காலாவதியானவை ஆகும்.

இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. ரோட்டில் கொட்டப்பட்டுள்ள மருந்துகளை மாநகராட்சி துப்பரவு பணியாளர் லாரியில் எடுத்து சென்றனர்.

மருந்து நிறுவன அதிபர் ​விமான நிலையத்தில் கைது

மார்ச் 26, 2010

காலாவதி மருந்து மோசடியில் கைதாகியுள்ள பிரதீப் சோர்டியா.
சென்னை,​​ மார்ச் 25: காலாவதியான மருந்துகளில் தேதிகளை திருத்தி மறுவிற்பனைக்கு அனுப்பிய மோசடி தொடர்பான வழக்கில் தலைமறைவான மருந்து விற்பனை நிறுவன அதிபர் பிரதீப் சோர்டியாவை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

நெல்லையில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்

மார்ச் 26,2010

திருநெல்வேலி:நெல்லையிலும் காலாவதியான மருந்துகள் தெருக்களில் கொட்டப் பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.சென்னையில் காலாவதியான மருந்து நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மருந்து மொத்த சப்ளை நிறுவனங்கள், மெடிக்கல் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் சோதøனைகள் நடத்தப்படுகின்றன.

நெல்லையில் 500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ளன.நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோவில், கண்ணம்மன் கோவில் தெரு, பெரிய தட்டார்குடி தெரு ஆகிய தெருக்களில் மருந்துகளின் மொத்த ஏஜன்சிகள் உள்ளன. இவற்றில், அதிகாரிகள் சோதனை நடத்துவர் என்ற தகவல் இருந்ததால், மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே குப்பை தொட்டிகளில் மருந்துகளை கொட்டினர். மருந்து பாட்டில்கள் குப்பையில் கிடந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அப்துல் காதர் கூறுகையில், 'நெல்லையில் காலாவதியான மருந்துகளை சப்ளை செய்ததாக தகவல் இல்லை. இருப்பினும், துறை அதிகாரிகள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். வழக்கமாக மருந்து விற்பனை செய்யும் ஏஜன்சிகள், காலாவதியான மருந்துகளை தங்கள் நிறுவனங்களுக்கே அனுப்பி விடுவர்.

அப்படி அனுப்பாதவற்றை பயந்து போய் தெருக்களில் கொட்டியுள்ளனர்.மேலும், பெனட்ரைல் இருமல் மருந்து, கார்பேஸ் எனப்படும் ரத்தக் கொதிப்பு மாத்திரை, வி நர்வ் என்னும் சத்து மாத்திரைகளை சோதனை நடத்துமாறு சென்னை அதிகாரிகள் தெரிவித்தனர். அவைகள் உண்மையான மருந்துகளா எனவும் சோதனை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்:சுகாதார செயலர் சுப்புராஜ் விளக்கம்

மார்ச் 26,2010

சென்னை:காலாவதி மருந்து விவகாரத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்,'' என, சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.சென்னையில் காலாவதியான மருந்துகள், மீண்டும் விற்பனைக்கு வந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாகியுள்ளது.

மருந்துக் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று, 'இது காலாவதியான மருந்தா?' என, கேட்டு வாங்கி வருகின்றனர். மருந்துக் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள காலாவதியான மருந்துகளை குப்பையில் கொட்டி அழித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் தமிழக சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் கடந்தாண்டில் மருந்துக் கடைகள், தயாரிப்பு நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு 20 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. தொடர்ந்து ரெய்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.காலாவதியான மருந்துகள் பிடிபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தற்போது பீதியடைந்துள்ளனர். தமிழகத்தில் 42 ஆயிரத்து 500 மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை மையங்கள் உள்ளன.

மருந்துக் கடைகள் இதில் அதிகம்.சேலத்தில், காலாவதியான மருந்துகளை மருந்து விற்பனை மையங்களை சேர்ந்தவர்கள், குப்பையில் கொட்டி அழித்து மேலும் பீதியை ஏற்படுத்தியுள் ளனர். சட்டப்படி மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் இருக்கத் தான் செய் யும். அவற்றை அழிப்பதற் கென வழிமுறைகள் உள்ளன.

காலாவதியான மருந்துகளை கடைக்காரர்கள், 'இது விற்பனைக்கல்ல' என குறிப்பிட்டு தனியாக வைத்திருக்க வேண் டும். இந்த மருந்துகளை மொத்த விற்பனையாளர்களிடம் அளித்தால் அவர்கள் உற் பத்தியாளர்களிடம் அனுப்பி விடுவர்.மருந்து உற்பத்தியாளர்கள் இவற்றை உரிய முறையில் அழித்து விடுவர். காலாவதியான மருந்து இருக்கிறது என்பதற்காக மருந்து கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது.

காலாவதி மருந்துகள் கடையில் இருந்தால் அதை குற்றம் என கருதி விடவும் முடியாது. எனவே, மருந்துகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. இது போன்ற குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க தற் போது உத்தரவிடப்பட்டுள் ளது. முன்பெல்லாம் தண்டனையும், அபராதமும் மிகக் குறைவாக இருந்தது. கடந் தாண்டு ஆகஸ்ட் முதல் 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய தண்டனை.


காலாவதி மருந்துகளை மீண் டும் விற்பனைக்கு விடுபவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மருந்துக் கடைகள் வளர்ந்த அளவிற்கு மருந்து கட்டுப் பாட்டுத்துறை வளரவில்லை. அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. தற்போது மருந்து ஆய்வாளர்கள் 50 பேர் உள்ளனர். மேலும், 25 பேரை புதிதாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் மருந்துகளில் உள்ள காலாவதி விவரத்தை பார்த்து வாங்குவதில்லை.

சமீபத்திய நிகழ்வுக்குப் பின் தற்போது அனைவரது மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது.துறையின் சார்பில் தற்போது மொத்த விற்பனையாளர்கள், மருந்து தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களுக்கான வழிமுறைகள், விதிகள் குறித்து விளக்கியுள்ளோம். மருந்துக் கடைகளில் பார்மசி படித்தவர் கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.ஆனால், யாரும் நியமிப்பதில்லை. இதுகுறித்தும் அவர்களிடம் வலியுறுத்தப்படும்.

மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்களுக்கு குற்றம் செய்தவர்களை கைது செய்யும் அதிகாரம் இல்லை. இது தொடர் விவகாரத்தில் வேறு சில மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் துறை அதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்தார்.

ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளுங்கள்:மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறும்போது,காலாவதி மருந்துகள் விற்பனை விவகாரத்தில் ஒரு கும்பலே இணைந்துசெயல்பட்டுள்ளது.இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் சிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர். மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் மேலும் தொடரும். இது குறித்து பொதுமக்கள் 044-2433 8421 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.

காலாவதியான மருந்து விற்பனை மோசடி, முக்கிய நபர் நீதிமன்றில் சரண்.

மார்ச் 26, 2010

சென்னை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருப்பது, காலாவதியான மருந்துகள் விற்பனை மோசடி. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே ஏழுபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மீனா ஹெல்த் கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

ஓராண்டில் பலகோடி காலாவதி மருந்துகளை கடத்தினேன்: டிரைவர் வாக்குமூலம்

மார்ச் 26 2010

‘கடந்த ஓராண்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகளை சப்ளை செய்தேன்’ என்று டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காலாவதியான மருந்துகளை சப்ளை செய்ததாக தேடப்பட்டு வந்த டிரைவர் வெங்கடேசன், ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் கொடுங்கையூர் போலீசார் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் வெங்கடேசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:

பெங்களூரில் உள்ள ‘கிரான்டிக்ஸ்’ நிறுவனத்தின் கிளை பூந்தமல்லியில் உள்ளது. அந்த நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறேன். காலாவதியான மருந்து,மாத்திரைகளை வேன்களில் ஏற்றி கொடுங்கையூரில் மருந்து அழிக்கும் இடத்துக்கு கொண்டு செல்வேன். அதற்காக எனக்கு 4 ஆயிரம் ரூபாயை கம்பெனி கொடுக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை இந்த லோடுகளை ஏற்றி செல்வேன். அப்போது மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகளை கொடுங்கையூரை சேர்ந்த ரவி என்ற பிரபாகரன் வாங்கி வந்தார். மருந்துகளை அழிக்க அவரும் உதவி செய்வார். அதற்காக ஒரு வேனுக்கு 1000 ரூபாயை ரவிக்கு கொடுப்பேன். கடந்த ஓராண்டுக்கு முன்பு சேகர், பாஸ்கர் ஆகியோர் எங்களை அணுகி காலாவதி மருந்துகளை கொடுத்தால் ஒரு லோடுக்கு 10 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்தனர்.

வீணாக போகும் மருந்தை யாருக்காவது கொடுத்தால் அவர்களுக்கு பயன்படட்டும் என்பதற்காக மருந்துகளை கொடுத்தேன். எனக்கு கொடுக்கும் 10 ஆயிரத்தில், ரூ.4 ஆயிரத்தை ரவிக்கு கொடுப்பேன். ரவி, அவரது மனைவி மற்றும் ஜானி பாஷா ஆகியோர் நான் கொண்டு வரும் மருந்துகளை வேறு வாகனங்களில் ஏற்றி அனுப்புவார்கள்.

ஓராண்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை சப்ளை செய்துள்ளேன். இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது எனக்கு தெரியாது. காலாவதி மருந்துகளை சாப்பிட்டால் தீமைகள், பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் தெரியாது.

இவ்வாறு தனது வாக்குமூலத்தில் வெங்கடேசன் கூறியுள்ளார்.

மேலும் மருந்துகள் எப்படி கடத்தப்பட்டது என்பது பற்றி போலீசாரிடம் வெங்கடேசன் நடித்து காட்டினார்.

காலாவதி மருந்து மோசடியில் டாக்டர்களும் கைதாக வாய்ப்பு?

மார்ச் 27, 2010

சென்னை,​​ மார்ச் 26: காலாவதி மருந்து மோசடியில் பல பகுதிகளில் உள்ள டாக்டர்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் மருந்து,​​ மாத்திரைகள் உரிய காலத்துக்குள் விற்பனையாகததால் அவை காலாவதியாகிவிடுகின்றன.

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி,​​ காலாவதி மருந்து,​​ மாத்திரைகளை அழிக்கும் நிறுவனங்களிடம் அந்த மருந்துகளை ஒப்படைத்து அழிக்க வேண்டும்.

ஆனால்,​​ பல சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் கம்பெனிகள்,​​ அவற்றை ஒப்படைப்பது கிடையாது.​ மாறாக,​​ காலாவதியாகும் மருந்துகளைச் சேகரித்து,​​ அவற்றின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றைத் திருத்தி,​​ மறு விற்பனைக்கு அனுப்பி மோசடி செய்தது அண்மையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் போலீஸôரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலாவதி மருந்து மோசடி தொடர்பாக மருந்து,​​ மாத்திரைகளில் தேதிகளை திருத்தியவர்கள்,​​ அவற்றை இருப்பு வைத்தவர்கள்,​​ விநியோகித்தவர்கள் என 2 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ ரூ.​ 1.5 கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்களிடம் நடைபெறும் விசாரணையில்,​​ மருந்து மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன.

மருந்து மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனம்,​​ அதிக பிரபலம் இல்லாத பல சிறிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஸ்டாக்கிஸ்ட் உரிமையைப் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம்,​​ காலாவதியான மருந்துகளை கடைகளுக்கு மட்டுமின்றி டாக்டர்கள் பலருக்கும் விநியோகித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, ​​ மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மருத்துவமனைகளில்,​​ சாதாரண தலைவலி,​​ காய்ச்சல் போன்ற நோய்களுக்காக வருபவர்களிடம் டாக்டர்கள்,​​ சீட்டுகளில் வரிசையாக மருந்து,​​ மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதும்,​​ நோயாளிகளிடம் கூடுதல் தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்களே மருந்து,​​ மாத்திரைகளை கொடுப்பதும் அதிகமாக உள்ளது.

டாக்டர்கள், ​​ வேளை வாரியாக பிரித்து கொடுப்பதால் மாத்திரைகள் குறித்த சந்தேகம் ஏற்படுவது கிடையாது.

இந்த மருந்து மோசடியில் மருந்து விற்பனையாளர்களை மட்டும் குறி வைக்காமல்,​​ சிறிய அளவிலான மருத்துவமனைகளையும்,​​ டாக்டர்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று மருந்து விற்பனையாளர்கள் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

விசாரணையில்...:​​ மோசடி தொடர்பாக காவலில் உள்ளவர்களிடம் நடைபெற்று வரும் விசாரணையில் இதில் டாக்டர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளன.

இத் தகவல்கள் தொடர்பான மேல் விசாரணையின் அடிப்படையில் இதில் தொடர்புள்ள டாக்டர்கள் மீது போலீஸôரின் நடவடிக்கை இருக்கும் என போலீஸôர் தெரிவித்தனர்.​

இதையடுத்து இந்த வழக்கில் டாக்டர்களும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

மார்ச் 27, 2010

சென்னை: காலாவதியான மருந்து, மாத்திரைகளை புதியது போல மாற்றி விற்கப்படும் மோசடி [^] அம்பலமானதை அடுத்து, பொதுமக்கள் மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மருந்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கியதற்கு கடைக்காரர்களிடம் இருந்து ரசீது கேட்டுப் பெற வேண்டும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் [^] செய்ய வேண்டும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும். மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

மற்றவர்களுடைய நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம்.

அல்லது 044 24338421, 24328734, 24310687, 24351581 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விளங்கங்கள் பெறலாம் என மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.

மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தொடரும்

இதற்கிடையே, காலாவதியான மருந்துகளை விற்றவர்கள் மீதான அரசின் நடவடிக்கை தொடரும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கு.​ சுப்புராஜ் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதுபற்றி குறிப்பிடுகையில்,

'காலாவதியான மருந்துகள் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.​ ஏனெனில் இது குறித்த அரசின் நடவடிக்கை தீவிரமாக தொடரும்.​

இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ தலைமறைவான நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காலாவதியான மருந்துகளை வைத்திருக்கும் மருந்துக் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள மருந்துகளை ஓரிடத்தில் வைத்து அதில் விற்பனைக்கு அல்ல என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.​

அந்த மருந்துகளை அந்தந்த மருந்து நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி விட வேண்டும்.​ இந்த விவகாரம் குறித்து மருந்து விற்பனையாளர்களும் பயப்படத் தேவையில்லை' என்றார்.

மேற்கண்டவற்றை படித்து உங்களுக்கு விவகாரமாக எதாவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்


மறக்காம வோட்டுப் போடுங்க


சனி, 20 மார்ச், 2010

அணு சக்தி ஒப்பந்தம்

அன்புடைய வலைப்பூ வாசகர்களுக்கு

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது.
ஆகவே நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க கீழ் கண்ட சுட்டியை சொடுக்கி கிரீன்பீஸ் தளத்தின் மூலம் ஒரு பெட்டிஷன் மனுவை நம்முடைய பிரதமருக்கு அனுப்பலாம்.

அன்புள்ள வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களால் முடிந்த அளவிற்கு இந்த விசயத்தை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இடுகையை முழுவதும் படிக்க இங்கே சொடுக்கவும்

Hello blog reader, Our government (India) is churning out one hazardous bill after another. This time it is a bill called the Civil Liability for Nuclear Damage, and it's coming up for a vote in a couple of days.
The bill lets U.S. corporations off the hook for any nuclear accidents they cause on Indian soil. They'd only have to pay a meagre amount, and Indian taxpayers would be stuck paying crores for the nuclear clean up and to compensate the victims.
Without any public debate, the Prime Minister is appeasing American interests and ignoring our safety.
Greenpeace is launching a petition asking the PM to hold a public consultation before introducing the bill.
I have already signed this petition. Can you join me?

Please Save India - http://www.greenpeace.org/india/stop-the-vote

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 15 மார்ச், 2010

Railway Recruitment Board Invites Applications For Various Positions

இந்தியன் ரயில்வே கீழ் கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

1. Staff Nurse : 468 posts

2. Health and Maleria Inspector Gr. II : 430 posts

3. Pharmacist Gr. III : 136 posts

4. Physiotherapist : 10 posts

5. Lab Assistant – II : 37 posts

6. Audiologist cum Speech Therapist : 01 post

7. Lab Superintendent Gr. III : 22 posts

8. Radiographer : 47 posts

9. Haemodialysis/ Dialysis Technician : 05 posts

10. Perfusionist : 02 posts

11. Cath. Lab Technician : 05 posts

12. Cardiology Technician : 01 post

13. Occupational Therapist : 02 posts

14. Lady Health Visitor : 01 post

15. Dietician : 02 posts

16. Refractionist : 01 post

17. Dental Hygienist (Oral Hygienist) : 07 posts

18. Distrcit Extension Educator : 03 posts

19. Field Worker : 07 posts

20. ECG Technician : 03 posts

21. Lab Assistant Gr.III (Medical) : 06 posts

22. Lab Technician Gr. II : 01 post

Application Fee : Rs.60/- or Rs.40/- as the case may or different posts in the form of IPO / DD in favour of Assistant Secretary of concerned RRB where candidate wants to apply.

How to Apply : Application in the prescribed format should be send to the Member Secretary of the concerned RRB where candidate want to apply on or before 13/04/2010. Candidates can also apply online at respective RRB websites.

The detailed advt. is published in the Employment News dated 13/03/2010 and it is also available at the websites of all the Railway Recruitment Boards (RRBs). Click here for the list of all RRB websites.

மறக்காம வோட்டுப் போடுங்க


புதன், 10 மார்ச், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - Women's reservation bill

திங்கள், 7 மார்ச் 2010

மக‌ளி‌ர் இடஒது‌க்‌கீடு மசோதா மா‌நில‌ங்களவை‌யி‌ல் நாளை தா‌க்க‌ல்


பெ‌ண்களு‌க்கு 33 சத‌வீத இடஒது‌க்‌கீடு வழ‌ங்கு‌ம் மசோதா மாநிலங்களவையில் நாளை ‌தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

மாநிலங்களவையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. எனவே இந்த மசோதா நிறைவேற பா.ஜ.க ஒத்துழைப்பு அளிப்பதென முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நே‌ற்று நட‌ந்த பா.ஜ.க தலைவர் கூட்டிய கூட்டத்தில், மகளிர் மசோதாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதென்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது என்று தே‌சிய‌த் தலைவ‌ர் கட்கரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக மாநிலங்களவை பா.ஜ.க கொறடா, தனது கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். மகளிர் மசோதா அறிமுகம் ஆகும்போது அனைத்து பா.ஜ.க உறுப்பினரும் அவையில் இருந்து அது நிறைவேற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போதைய வடிவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக எதிர்ப்போம் என சமா‌ஜ்வாதி கட்சி‌த் தலைவ‌ர் முலாய‌ம்‌ சி‌ங் யாத‌வ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இத‌னிடையே ம‌க‌ளி‌ர் மசோதாவை ஆதரிப்பதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவுக்கும், அக்கட்சியைச் சேர்ந்தவரும், ‌பீகார் முதலமை‌ச்சருமான நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

திங்கள், 8 மார்ச் 2010( 11:20 IST )

மாநிலங்களவை 12 மணி வரை தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்ற பரபரப்புடன் துவங்கிய மாநிலங்களவை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நண்பகல் 12 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை இன்று துவங்கியதும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த அறிக்கையை மத்திய அரசு ஏன் அமல்படுத்தவில்லை என்று சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி கோஷமிட்டனர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை மதியம் 12 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 12:33 IST )

மகளிர் மசோதாவில் மாற்றம் கோரி அமளி: மக்களவை தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில், பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்

இதன் காரணமாக மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை மதியம் 2 மணி வரை தள்ளிவைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 14:04 IST )

மத்திய அரசுக்கான ஆதரவு: சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாபஸ்


மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஏற்காத காரணத்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உள்ஒதுக்கீடு இன்றி நிறைவேற்றுவது அரசியல் ஏமாற்றுத்தனம். இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திருமப் பெறுகிறோம்” என்றார். அப்போது முலாயம் சிங் உடனிருந்தார்.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில், பிற்படுத்தப்பட்டோர், தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கோரியிருந்தன. ஆனால் அதனை ஏற்காத மத்திய அரசு மகளிர் மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

மக்களவையில் சமாஜ்வாடிக்கு 21 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை இரு கட்சிகளும் விலக்கிக் கொண்ட போதிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலம் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 8 மார்ச் 2010( 15:27( 11:20 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: நாடாளுமன்றம் தள்ளிவைப்பு


மக்களவை, சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவை, மாநிலங்களையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் மாலை 4 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முக்கிய எதிர்க்கட்சியான பாஜக ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள போதிலும், அந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தலித் இனப் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவை நடவடிக்கைகள் மாலை 4 மணி வரை தள்ளி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திங்கள், 8 மார்ச் 2010( 15:45 IST )

மாநிலங்களவையில் அமளி: அன்சாரியிடம் அமைச்சர்கள், தலைவர்கள் மன்னிப்பு


மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது மரியாதைக் குறைவான முறையில் நடந்து கொண்டதற்காக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மன்னிப்புக் கோரினர்.

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை அன்சாரி தள்ளி வைத்தார்.

இதையடுத்து, அவையில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட காரணத்திற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, ப்ரித்விராஜ் சௌஹான், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் மன்னிப்புக் கோரினர்.

இதேபோல் மாயா சிங் (பாஜக), சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், டி.ராஜா, கரண் சிங், ராஜிவ் சுக்லா (காங்.), மைசுரா ரெட்டி (தெலுங்கு தேசம்), பரத் குமார் ரௌத் (சிவசேனா), டி.சிவா (திமுக) ஆகியோரும் அன்சாரியை சந்தித்து மன்னிப்புக் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 8 மார்ச் 2010( 16:22 IST )

மக்களவை நாளை வரை தள்ளிவைப்பு: மாநிலங்களவையில் 6 மணிக்கு வாக்கெடுப்பு


நாடாளுமன்றம், சட்டப் பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவின் மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக, இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் நாளை காலை வரை அவை நடவடிக்கைகளை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 20:35 IST )

மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தாமல் வாக்களிக்க மாட்டோம்: பாஜக


மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடத்தப்படாவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என பாஜக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மாநிலங்களையில் இன்று மதியம் 2 மணிக்கு மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தலித் இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாநிலங்களவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல், குழப்பம் நீடித்ததால் அவை நடவடிக்கைகள் மாலை 6 மணி வரை தள்ளிவைப்பதாகவும், மாலை 6 மணிக்கு மேல் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய பாஜக, மசோதா மீது விவாதம் நடத்தாமல் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவைத் துணைத்தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த (மகளிர்) மசோதாவை தாக்கல் செய்வதில் மத்திய அரசு உரிய வரையறையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த மசோதா மீது விவாதம் நடத்தாமல் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மசோதா மீது நிச்சயம் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

திங்கள், 8 மார்ச் 2010( 18:40 IST )

மாநிலங்களவையில் அமளி: மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீது மாநிலங்களவையில் இன்று நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. முன்னதாக அவை நடவடிக்கையின் போது அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மசோதா நகலை கிழித்து எறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயன்றதால் அமளி ஏற்பட்டது.

மாநிலங்களை ஒவ்வொரு முறை கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாலை 6 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தாமல் வாக்களிப்பு நடத்தினால் அதில் பங்கேற்க மாட்டோம் என பாஜக அறிவித்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு மக்களவை கூடிய, ஒரு சில நிமிடங்களில் மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பை தள்ளிவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 19:17 IST )

மகளிர் மசோதா: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மன்மோகன் ஏற்பாடு


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் கடும் அமளி காரணமாக வாக்கெடுப்பு நடத்த முடியாமல் அவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பா.ஜனதா, சிபிஐ - எம், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

அப்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற அவர்களது ஒத்துழைப்பை கோரினார்.

மேலு இம்மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக நாளை அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தாம் கூட்டி உள்ளதாகவும், இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களை மன்மோகன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற வேண்டும் என தமது கட்சி விரும்பும் அதே சமயத்தில் நாடாளுமன்ற மரபுகளும் மதிக்கப்பட வேண்டும் என கருதுவதாகவும் கூறினார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 09:57 IST )

காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மேலிடம் உத்தரவு


இன்றைய மாநிலங்களவை நடவடிக்கையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான வாக்கெடுப்பு கடும் அமளியின் காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இன்று வாக்கெடுப்பு நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று தவறாமல் மாநிலங்களவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என நேற்று மாலை கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 9 மார்ச் 2010( 10:42 IST )

சரத் யாதவ், லாலு, முலாயம் பிரதமருடன் சந்திப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று புதுடெல்லியில் சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அனைவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய சரத் யாதவ், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என்றார்.

லாலு பிரசாத் கூறுகையில், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பற்றி விவாதிக்க வேண்டும்” என்றார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 11:31 IST )

மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு: மாநிலங்களவை தள்ளிவைப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை இன்று காலை துவங்கியதும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, “உறுப்பினர்களின் நடவடிக்கை கவலையளிக்கிறது” என்று கூறி அவை நடவடிக்கைகளை மதியம் 12 மணிவரை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 11:51 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு: முலாயம், லாலுக்கு அமர் சிங் எச்சரிக்கை


பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் யாதவத் தலைவர்கள், நாட்டில் உள்ள பெண்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அமர் சிங் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது வலைப்பூவில் அமர் சிங் வெளியிட்டுள்ள கருத்தில், “யாதவ தலைவர்களே, பெண்கள் சக்தியை வீணாக கோபப்படுத்தாதீர்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது” எனக் கூறியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றும் விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சிகள் விலக்கிக் கொண்டதற்கும் அமர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சியில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த அமர் சிங், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 12:47 IST )

மகளிர் மசோதாவைக் கிழித்த 7 எம்.பி.க்கள் நீக்கம்: ஹமீத் அன்சாரி அதிரடி


மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிழித்தெறிந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்களை தற்காலிமாக நீக்குவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கிடைக்க வகை செய்யும் மகளிர் மசோதாவை மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவைக் கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று மசோதாவை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இஜாஸ் அலி, சுபாஷ் யாதவ், சபிர் அலி, நந்த் கிஷோர் யாதவ், கமல் அக்பர், அமிர் ஆலம் கான், வீர்பால் சிங் யாதவ் ஆகியோரை தற்காலிகமாக நீக்குவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி இன்று அறிவித்தார்.

நேற்றைய மாநிலங்களவை நடவடிக்கையின் போது ஹமீத் அன்சாரி மேஜையில் இருந்து ஒலிப்பெருக்கியைப் பிடுங்கி அவைத் தலைவரைத் தாக்க கிஷோர் யாதவ் முயன்றது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 12:37 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றம் 2 மணி வரை தள்ளிவைப்பு


மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவர் மீரா குமாரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:15 IST )

மகளிர் ஒதுக்கீட்டை எதிர்த்து அமளி: மக்களவை 3 முறையாக தள்ளிவைப்பு


நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவை எதிர்த்து சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 3 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மக்களவை கூடியதும் சட்ட வரைவை எதிர்க்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து எதிர்ப்பு முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளை சிறுது நேரத்திற்கு மக்களவைத் தலைவர் மீரா குமார் தள்ளிவைத்தார்.

அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை தொடர்ந்தது. எதிர்ப்பு முழக்கங்களுக்கு இடையிலும் கேள்வி நேரம் நடத்தினார். ஆனால் சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் உரத்த குரலில் முழங்கியதால் அவை நடவடிக்கைகளை மீண்டு்ம் தள்ளிவைக்கப்பட்டது.

அதன் பிறகு, 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், இராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் ஆகியோரும் தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்ப்பு முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகளை 3வது முறையாக பிற்பகல் 2 மணி வரை மீரா குமார் தள்ளி வைத்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:42 IST )

இரு அவைகளும் 4வது முறையாக தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை, மக்களவை நடவடிக்கைகள் இன்று 4வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவை எதிர்த்து சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகளை 4 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

இதேபோல் மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய போதும் மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை மாலை 3 மணி வரை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 17:58 IST )

மகளிர் மசோதா: மம்தா கட்சி வாக்களிக்காது


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்காது என்று தெரிகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இம்மசோதா மீதான பிரச்னை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்த நிலையில், திடீரென மகளிர் மசோதா வாக்கெடுப்புக்கும், விவாதத்திற்கும் எடுத்துக்கொளப்பட்டதால், தமது கட்சி உறுப்பினர்களை அவையில் கலந்துகொள்ளும்படி தம்மால் தகவல் தெரிவிக்க முடியாமல் போய்விட்டதாகவும், எனவே வாக்கெடுப்பில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவரது இந்த முடிவு ஐமுகூ அரசுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 19:47 IST )

மகளிர் இடஒதுக்கீடு சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேறியது!


நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேறியது.

மகளிர் இடஒதுக்கீடு மீது நடந்த விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி வாக்கெடுப்பு நடத்தினர்.

இதில், மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்து 186 வாக்குகள் பதிவாகின. எதிர்த்து ஒரு வாக்கு பதிவானது.

மூன்றில் இரண்டு விழுக்காடு வாக்குகள் ஆதரவாக பதிவானதையடுத்து மகளிர் இடஒதுக்கீடு சட்ட வரைவு நிறைவேறியதாக மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி அறிவித்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:54 IST )

மன்மோகன், சோனியாவுடன் முலாயம், லாலு சந்திப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் லாலு பிரசாத், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோர் பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்து தங்களின் எதிர்ப்புக்கான விளக்கத்தை அளித்தனர்.

நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்லை. மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்த மசோதா மீதான வாக்கெடுப்பும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் அவர்கள் மூவரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து பேசினர்.

மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மதியம் சந்திப்பு நடத்தினார்.

பிரதமர் உடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அகமது படேல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ஆகியோரும் உடனிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 10 மார்ச் 2010( 08:27 IST )

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் கடிதத்தை குடியரசு தலைவ‌ரிடம் கொடுக்கிறார் லாலு


மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் கடிதத்தை குடியரசு தலைவ‌‌ர் ‌பிர‌தீபா பா‌‌ட்டீ‌லிட‌ம் இ‌ன்று ரா‌ஷ்டி‌‌ரீய ஜனதாதள‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் லாலு ‌பிரசா‌த் யாத‌வ் கொடு‌க்‌கிறா‌ர்.

நானும், முலாயம் சிங்கும் பிரதமரை சந்தித்த போது, தற்போது உள்ள நிலையிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம் எ‌ன்று‌ம் எங்களுடைய வேண்டுகோளையும் மீறி மசோதாவை மா‌நில‌ங்களவை‌யி‌ல் அரசு நிறைவேற்றி இருக்கிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

எனவே குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீலை இ‌ன்று சந்தித்து, மத்திய அரசுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை கொடுக்க இருக்கிறேன் எ‌ன்று லாலு பிரசாத் கூறினார்.

நன்றி வெப்துனியா.காம்

இத்துடன் எனது முந்தைய இடுகையையும் படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
இடுகையை படிக்க இங்கே சொடுக்கவும்.

மறக்காம வோட்டுப் போடுங்க


பேரபாயம் காத்திருக்கிறது...!

தலையங்கம்
தலையங்கம்:பேரபாயம் காத்திருக்கிறது...!

First Published : 09 Mar 2010 12:48:00 AM IST

Last Updated : 09 Mar 2010 02:48:57 PM IST

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

மறக்காம வோட்டுப் போடுங்க


செவ்வாய், 9 மார்ச், 2010

Nithiyanatha with ranjitha

உண்மையயை உணருங்கள் தமிழ் மக்களே


Daily thanthi

சுவாமி நித்யானந்தா மீது வழக்கு பதிவு
`உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் கமிஷனர் தகவல்


சென்னை, மார்ச்.5-

சுவாமி நித்யானந்தா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

நித்யானந்தா மீது புகார்கள்

சுவாமி நித்யானந்தா மீது நேற்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் புகார் மனுக்கள் கொடுத்தனர். வக்கீல் சிவா கொடுத்த புகார் மனுவில், சுவாமி நித்யானந்தா இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுள்ளார். காவி உடையோடு `செக்ஸ்' லீலையில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் குமாரவேல் என்பவரும் ஒரு மனு கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில், நித்யானந்தா சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகளை ஒளிபரப்பு செய்யாமல் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வக்கீல் கார்த்திகேயன் என்பவர் கொடுத்த மனுவில், நித்யானந்தா மீதும், அவரோடு இருக்கும் நடிகை மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இது சம்பந்தமான ஆபாச காட்சிகளை வெளியிடுவதற்கும் தடை விதிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

கிரிமினல் வழக்கு

இந்த புகார்கள் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், நித்யானந்தா மீது வக்கீல்கள் கொடுத்த புகார் மனு அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்மீது புகார் மனுக்கள் வந்தால் அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல், நித்யானந்தாவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது இ.பி.கோ. 420 மற்றும் 295-ஏ ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கோவை போலீசார் தெரிவித்தனர்.

மகனை மீட்டுத்தர கோரிக்கை

இதற்கிடையே, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் மணலி பகுதியை சேர்ந்த வாசன் என்பவர் ஒரு புகார் மனு தந்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

எனது மகன் மெய்யிறை (வயது 26) என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நித்யானந்தா சாமியார் மடத்தின் சார்பில் யோகா நடந்தது. இதில் எனது மகன் கலந்து கொண்டார்.

பின்னர் வாழ்க்கை கல்வி என்ற ஓராண்டு வகுப்பில் சேர்ந்தார். இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூர் சென்றார். 3 ஆண்டுகளாகியும் மெய்யிறை வரவில்லை. நான் பெங்களூர் சென்றபோது எனது மகனை பார்க்க விடவில்லை. அங்கு சிறை வைக்கப்பட்டு உள்ள எனது மகனை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த புறநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், `காவல் துறை ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி சாமியார்களை கண்காணிக்கவேண்டும். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இவற்றை எல்லாம் வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 11-ந் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில்...

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி (காங்) தலைவர் சித்தராமையா பேசும் போது, "பிடதி அருகே ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்த சாமியை உடனே கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும். அவர் செய்து இருப்பது ஜாமீனில் வெளிவராத குற்றமாகும். ஆசிரம சொத்துக்களை அரசு முடக்க வேண்டும்'' என்று கூறினார்.

இதற்கு போலீஸ் மந்திரி ஆச்சார்யா பதில் அளித்து கூறியதாவது:-

நித்யானந்த சாமி தமிழ்நாடு திருவண்ணாமலையை சேர்ந்தவர். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி உள்ள ஆபாச காட்சிகள் கர்நாடகத்தில் நடந்தது அல்ல. ஆசிரமத்தில் புலி, மான் போன்ற மிருகங்களின் தோல்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். ஆனால் அதுபோன்ற மிருக தோல்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. 26 கிலோ சந்தன மர துண்டுகள் மட்டும் கிடைத்தது. ஏற்கனவே ஆசிரமத்தில் உள்ள சந்தன மரம் திருட்டுப்போய் இருப்பதாக போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது.

இந்த துண்டுகள் அந்த மரத்தின் கிளைகளாகவும் இருக்கலாம். நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு போலீசுடன் நிரந்தர தொடர்புடன் உள்ளோம். அவர் இங்குள்ள ஆசிரமத்துக்கு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு போலீஸ் மந்திரி ஆச்சார்யா கூறினார்.


daily thanthi

நித்யானந்தா மீது வழக்குப்பதிவு:
நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு


கோவை, மார்ச்.6-

நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

2 பிரிவுகளில் வழக்கு

கோவை கணபதி பூசாரிபாளையம் மணியகாரன்பாளையத்தை சேர்ந்தவர் டி.எம்.விஸ்வநாத். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் `ஆன்மிகத்தின் பெயரால் நித்யானந்தா பொது மக்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து காணிக்கை, நன்கொடை மற்றும் கட்டணம் ஆகிய வழிகளில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு பணம் வசூலித்து அதனை தன் சுயலாபத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். கோவை மாநகரில் `பகவத் கீதை சத் சங்கம்' என்ற பெயரில் பெரிய அளவிலான பொருட்செலவில் முகாமை நடத்தி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நித்யானந்தாவை கைது செய்து விசாரிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

அவருடைய மனுவின் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 (மோசடி), 295 ஏ (மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த முடிவு

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாக சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்கும் இடம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் பதிவாகும் புகார்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.


கமிஷனர் அலுவலகத்தில்...

இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரம வக்கீல் ஸ்ரீதர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நித்யானந்தா சுவாமிகள் தலைமறைவாகவில்லை. அவர் 18-ந் தேதிக்கு பிறகு சென்னை வருவார்'' என்று தெரிவித்தார்.

ரஞ்சிதா மீது...

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை வக்கீல் ராஜலட்சுமி என்பவர் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

நித்யானந்தா, நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிட்டது, பிளஸ்-2 பரீட்சை எழுதும் மாணவ-மாணவிகளை பெரிதும் பாதித்து விட்டது. எதிர்காலத்தில் இது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிடாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதே போல் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் சபீர் என்பவர் கொடுத்த புகாரில், நடிகை ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

daly thanthi

குற்றச்சாட்டுகள் பற்றி நித்யானந்தா சாமியார் வீடியோவில் தோன்றி பரபரப்பு பேச்சு
"சட்ட ரீதியாக எந்த தவறையும் செய்யவில்லை''

சென்னை, மார்ச்.8-

நித்யானந்தா சாமியார் நேற்று திடீர் என்று வீடியோ காட்சியில் தோன்றி `நான் சட்ட ரீதியாக எந்த தவறையும் செய்யவில்லை, உண்மை வெளிவரும் வரை பொறுமையாக இருங்கள்' என்று சீடர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆபாச காட்சியில் நித்யானந்தா சாமியார்

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நித்யானந்தா சாமியார் வீடியோவில் பேசிய ஆடியோ விடியோ அடங்கிய சி.டி.யை அவரது வக்கீல் ஸ்ரீதர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார். அந்த வீடியோ காட்சியில் நித்யானந்தா சாமியார் பேசியதாவது:-

உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். கடந்த சில நாட்களாக என் மீதும், தியான பீடத்தின் சங்கத்தின் மீதும், பல குற்றங்களும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் இருந்தும் என் பக்தர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருடைய அன்பையும், ஆதரவையும் இ-மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.

எந்த தவறையும் நான் செய்யவில்லை

எனது செய்கையாலும், தியானங்களாலும் பயன் அடைந்த அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும் என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும், வதந்திகளும் கவலையளிப்பதாக உள்ளது.

எல்லோருக்கும் ஆணித்தரமாக சொல்லவிரும்புகிறேன். சட்ட ரீதியாக எந்த தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை, நாங்கள் இந்த குற்றச்சாட்டுகளையும், வதந்திகள் சார்ந்த எல்லாவிதமான செய்திகளையும், உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கும், வதந்திகளுக்கும் பின்னால் இருக்கும் காரணம், அவர்களின் மனஅமைப்பு. இவைகளில் இருக்கும் பொய்கள் அனைத்தையும் கண்டறிய எல்லா உண்மைகளையும் திரட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த எல்லா குற்றச்சாட்டுகள் பற்றியும் மிகத்தெளிவான விளக்கத்தை விரைவில் அளிக்கின்றேன். தயவு செய்து அந்த செய்திகளை சேகரிக்கின்ற சில நாட்கள் வரை மட்டும் பொறுமையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லாவிவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் எந்த முடிவுக்கும் நீங்கள் வரவேண்டாம் என்று எல்லோரையும் மனம் உருகி கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையை நேரில் சொல்கிறேன்

எல்லா உண்மைகளும், எல்லா சத்தியங்களும் உங்களுக்கு நிச்சயமாக சொல்லப்படும். இவற்றை சேகரித்து கொண்டிருக்கின்றோம். அதுவரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது பக்தர்கள், சீடர்கள், அன்பர்கள் அனைவரின் பேராதரவிற்கும் இப்படி கடினமான நேரங்களில் தியான பீடத்திற்கு துணை நிற்பதற்காகவும் எனக்கு துணை செய்வதற்காகவும் மிகுந்த நன்றியோடு வணங்குகிறேன். சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்த பிறகு உங்கள் முன்பு எல்லா உண்மைகளையும் திறந்து வைக்கிறேன். நன்றி.

இவ்வாறு நித்யானந்தா சாமியார் பேசியுள்ளார்.

daily thanthi

ஆசிரம சீடர்கள் சென்னை போலீசில் ஓப்புதல் வாக்குமூலம்
நித்யானந்தா மீது 6 வழக்குகள் பதிவு
அனைத்து வழக்குகளும் கர்நாடகத்துக்கு மாற்றம்


சென்னை, மார்ச்.7-

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் இருக்கும் வீடியோ படத்தை நான்தான் ரகசியமாக எடுத்தேன்'' என்று அவரது சீடர் ஒருவர் சென்னை போலீசில் பரபரப்பான வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து, நித்யானந்தா மீது 6 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், அந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்துக்கு மாற்றப்படும் என்று கூறினார்கள்.


நித்யானந்தா சாமியார்

தமிழகம், கர்நாடகம் மற்றும் பல்வேறு இடங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. அவற்றை பார்த்தவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் கருணாநிதியே, இதுபோன்ற அருவருக்கத்தக்க காட்சிகளை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளிலும் வெளியிடக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

நித்யானந்தாவை பற்றிய வீடியோ காட்சிகளும், படங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சீடர் தயாரித்த சி.டி.

இதற்கிடையே, நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற சி.டி.யை தயாரித்தவர் யார்? அந்த படம் எங்கே, யாரால் பதிவு செய்யப்பட்டது? அது உண்மையானதுதானா? என்ற பல சந்தேகங்கள் எழுந்தன. இந்த மர்ம முடிச்சுகளுக்கு விடைதெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், ``அந்த ரகசிய வீடியோவை எடுத்தது நான்தான்'' என்று நித்யானந்தாவின் முக்கிய சீடரான கே.லெனின் என்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா கூறி உள்ளார். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஆவார்.


சென்னை போலீசில் புகார்

ஸ்ரீநித்ய தர்மானந்தா சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து நித்யானந்தா மீது புகார் மனு ஒன்றை கொடுத்ததோடு அவரது படுக்கையறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நடிகை ரஞ்சிதா

2004-ம் ஆண்டு முதல் நித்யானந்தரின் மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள நித்யானந்தா பீட ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தேன். நித்தியானந்தர் தனது ஆசிரமத்துக்கு வரும் அழகான அப்பாவி பெண்களிடம் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறி, அவர்களை `கோபியர்` என்று கூறி கட்டிப்பிடிப்பார்.

அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஆசிரமத்தில் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து உள்ளார். ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது.

நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இதனால் என்னுடைய வாழ்க்கை பாழாக்கப்படுவதாக உணர்ந்தேன். லட்சக்கணக்கான பக்தர்களையும், சீடர்களையும் நித்யானந்தா ஏமாற்றுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள், நடிகை ரஞ்சிதாவுடன் அவர் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் எடுத்தேன்.

கொலை மிரட்டல்

இதனால் நித்யானந்தா என்னை மிரட்டினார். 18.2.2010 மற்றும் 19.2.2010 ஆகிய தேதிகளில் சேலம், சீரகப்பாடியில் புதிய ஆசிரமம் திறப்பு விழா நடந்தது. இதற்கு நித்யானந்தர் வந்தார். நானும் அங்கு சென்று இருந்தேன். அப்போது அவர் என்னை தன்னுடைய வேனுக்குள் அழைத்து, ``படம் ஏதாவது எடுத்தாயா?'' என்று கேட்டதோடு என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். அவருடன் இருந்த சீடர்களும் என்னை மிரட்டினார்கள்.

ஆனால், நான் கழிவறைக்கு செல்வதாக கூறி அவர்களிடம் இருந்து தப்பி விட்டேன். எனவே நித்யானந்தா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை நம்பியுள்ள அப்பாவி இந்துக்களையும், இந்து மக்களையும் அவரிடமிருந்து காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சீடர் தர்மானந்தாவின் புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6 பிரிவுகளில் வழக்கு

இந்த புகார் மனு தொடர்பாக நித்யானந்தர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 295ஏ (மதஉணர்வை புண்படுத்தும் செய்கை), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (ஓரினச் சேர்க்கை போன்ற இயற்கைக்கு மாறான உறவு), 506(1) (அச்சுறுத்துதல்) மற்றும் 120 (பி) (சதிக்குற்றம்) ஆகிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றதால், இவ்வழக்கு கர்நாடக மாநில காவல்துறைக்கு தமிழக காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி) மூலம் மாற்றப்பட இருப்பதாகவும், மேலும் வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையினருக்கு அனைத்து உதவிகளையும் தமிழக காவல்துறை செய்யும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கனடா பிரஜை தற்கொலை

நித்யானந்தா சாமியாரின் ஆசிரமத்தில் சீடராக இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தர்மானந்தா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அவர் எப்போது கொடுத்தார் என்பதை சொல்ல முடியாது. அந்த புகாரின் பேரில், 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்ததை தானே ரகசியமாக படமெடுத்ததாக, புகார் அளித்த சீடர் தர்மானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். அதனை சி.டி.யாக தயாரித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிடாரியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த கனடா பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வாக்குமூலத்தில் அவர் தெரிவித்து உள்ளார். தர்மானந்தா தனது புகார் மனுவுடன் தான் தயாரித்த சி.டி.யையும் இணைத்து உள்ளார்.

கர்நாடகத்துக்கு மாற்றப்படும்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தாலும், இந்த வழக்கு தொடர்பான சம்பவங்கள் அனைத்தும் கர்நாடக மாநிலத்தில்தான் நடைபெற்று உள்ளன. தமிழகத்தில் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இதனால், இந்த வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற இருக்கிறோம். இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி.யுடன் நான் பேச இருக்கிறேன். ஏற்கனவே இது பற்றி கர்நாடக டி.ஜி.பி.யிடம், தமிழக டி.ஜி.பி. பேசியுள்ளார். விரைவில் இவ்வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்படும். கர்நாடக மாநிலத்துக்கு தேவையான ஒத்துழைப்பு தரப்படும்.

இந்த வழக்குகள் கர்நாடகத்துக்கு மாற்றப்படும் வரை சென்னை போலீசார் தங்களுக்கு வந்துள்ள 2 புகார்கள் பற்றியும் விசாரணை நடத்துவார்கள். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நித்யானந்தாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னையில் இதுவரை வேறு யாரும் சுவாமி நித்யானந்தா மீது புகார் தரவில்லை (அப்போது, நிருபர் ஒருவர் குறுக்கிட்டு; நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிகள் வெளியானதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக ராஜலட்சுமி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறாரே? என்று கேட்டதற்கு, அந்த புகார் பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் அதை பார்த்த பிறகு அது பற்றி தெரிவிப்பதாகவும் கமிஷனர் டி.ராஜேந்திரன் கூறினார்).

எங்கே இருக்கிறார்?

ரஞ்சிதாவுடன் சாமியார் இருப்பது போன்ற வீடியோ படம், கடந்த ஆண்டு (2009) இறுதியில் கர்நாடகத்தில் எடுக்கப்பட்டதாக சீடர் நித்ய தர்மானந்தா தெரிவித்து உள்ளார். அதுபோல் வேறு யாருடனாவது நித்யானந்தா இருக்கும் சி.டி.க்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

நடிகை ரஞ்சிதா தற்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் எங்களிடம் இல்லை. அதுபோல் இந்த புகாரை கொடுத்த சீடர் தர்மானந்தாவும் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. நித்யானந்தா சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்யலாம்.

சீடர் தர்மானந்தா நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து நித்யானந்தா சாமியார் மீது புகார் அளித்ததாக தெரிகிறது.

---------

2 மணி நேர சி.டி.யை பார்த்தது யார்?

``நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் வீடியோ சி.டி, 2 மணி நேரம் ஓடுவதாகவும், சென்னை பர்மா பஜாரிலோ, வேறு எங்குமோ இந்த சி.டி. கிடைப்பதாக தகவல் ஏதும் இல்லை என்றும் போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் பேட்டியின் போது தெரிவித்தார். அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, ``அந்த சி.டியை நீங்கள் பார்த்தீர்களா'' என்று கேட்டார். அதற்கு, ``நான் பார்க்கவில்லை'' என்று சிரித்தபடியே பதில் அளித்த அவர், ``அந்த சி.டி.யை முழுதாக பார்த்தவர் இவர்தான்'' என்று அருகில் இருந்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதரை காட்டினார்.

இதைத் தொடர்ந்து, ``சி.டி.யில் ருசிகர காட்சிகள் இருக்கின்றனவா?'' என்று துணை கமிஷனர் ஸ்ரீதரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ``அது போன்ற காட்சிகள் ஏதும் இல்லை'' என்று அவசர அவசரமாக மறுத்தார். அப்போது அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

``இதுபோன்ற ஆபாச காட்சிகள் டி.வி., பத்திரிகையில் வெளிவருவதால் பல தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா?'' என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டதற்கு, பத்திரிகைகளுக்கு சென்சார் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா? என கேட்டார்.

சாமியார் நித்தியானந்தாவின் லீலைகளை தொலைக்காட்சிக்கு அனுப்பிய மர்ம பெண் யார்?

சாமியார் நித்தியானந்தாவின் லீலைகளை வீடியோவாக பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு அனுப்பிய பெண் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.


திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சாமியார் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியானது. இந்த காட்சிகள் பொய்யானவை என்ற சுவாமி நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மார்பிங் முறையில் உருவத்தை மாற்றி இருப்பதாக அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

ஆசிரமத்தில் பணிபுரிந்த பிரேமானந்தா என்ற லெனின் கருப்பன் மூலம் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆந்திரா கவர்னராக இருந்த என்.டி. திவாரி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி வெளியானது. இவை எல்லாமே பணத்துக்காக திட்டமிட்டு படம் பிடிக்கப்பட்டதாகும்.

அதே பாணியில் நித்யானந்தாவையும் படம் பிடித்து அவரது ஆன்மீக புகழை அழிக்க ஒரு கும்பல் திட்டமிட்டதும் அந்த கும்பல் நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் தெரிய வந்துள்ளது.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் படுக்கை அறை காட்சிகளை ஒரு பெண் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சி.டி.க்காக தயாரித்தார் என்றும் அந்த பெண்தான் சென்னையில் உள்ள எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், சாமியாரது சி.டி.க்களை பதிவு தபாலில் அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த சி.டி.யுடன் 10 பக்க விளக்கக் குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். அதில் அவர், சுவாமி நித்யானந்தா பல பெண்களுடன் இருக்கும் சி.டி.க்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாராம். அந்த மர்ம பெண் யார் என்பது தெரியவில்லை.

சாமியார் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நடிகை ரஞ்சிதா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவரும், சாமியாரும் இருப்பது போன்ற காட்சிகளை பார்க்கும் போது, ரஞ்சிதா சினிமா காட்சி போல் சர்வ சாதாரணமாக போஸ் கொடுக்கிறார்.

எனவே ரஞ்சிதா பணத்துக்காக இந்த காட்சியில் நடித்து இருக்கலாம் என்றும் இதற்காக லட்சக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சாமியார் ஆசிரமத்தில் பழைய நடிகை ராகசுதா யோகா கற்று அங்கேயே தங்கி இருந்து பக்தி பிரசங்கம் செய்து வந்தார்.

சாமியாருடன் ஏற்பட்ட மோதலில் ராகசுதா இந்த சி.டி.யை தயாரித்து ஒரு பெண் மூலம் பத்திரிகை மற்றும் டெலிவிஷனுக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சி.டி.யை அனுப்பிய அந்த பெண் சிக்கினால்தான் இந்த சதி திட்டங்களில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது தெரிய வரும். dinamalar மார்ச் 09,2010,00:00 IST


நித்யானந்தா விவகாரத்தில் அரசியல் பின்னணியா?
பெங்களூரு :"நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் கருப்பன் பின்னணியில், அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் உள்ளனர்' என, பிடதி நித்யானந்தா தியான பீடத்தைச் சேர்ந்த நித்ய சச்சிதானந்தா தெரிவித்தார்.


கடந்த சில நாட்களாக, நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து விளக்கமளித்த நித்யானந்தாவின் சீடரான நித்ய சச்சிதானந்தா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கடந்த 2ம் தேதி இரவு, நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த காட்சிகள் அனைத்தும், கிராபிக்ஸ் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது. நித்யானந்தாவின் உருவம் எடிட் செய்யப்பட்டு, இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம். நித்யானந்தாவுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது.இந்த வீடியோ காட்சியை எடுத்துக் கொடுத்ததாக லெனின் கருப்பன், தமிழக போலீசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். பிளஸ் 2 வரை மட்டுமே படித்த லெனின் கருப்பனுக்கு தொழில் நுட்பங்கள் தெரியாது. அவருக்கு பின்னணியில், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் இருந்து இயக்கி உள்ளனர்.


கனடாவைச் சேர்ந்த மெல்வியா டயமண்ட், ஆசிரமத்தில் கொலை செய்யப்பட்டதாக லெனின் கருப்பன் புகார் கூறியுள்ளார். கட்டடத்திலிருந்து கீழே விழுந்ததால் தான், மெல்வியா இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.திருச்சி, நவலூர் குட்டப்பட்டு நித்ய பிரபானந்தா என்ற சுரேந்தரை, ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்திருப்பதாக, அவரது பெற்றோர் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால், தன் விருப்பப்படி தான் ஆசிரமத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வாசன், தன் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அவரை, நல்ல முறையில் அழைத்துச் செல்வதாக அவரது பெற்றோர் எழுதிக் கொடுத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன். இதற்காக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.


தற்போது, ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ள நித்யானந்தா, இன்னும் மூன்று நாட்களில் பிடதிக்கு வந்ததும், அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவார். இவ்விவகாரத்தில் கர்நாடக அரசும், போலீஸ் துறையும், பொது மக்களும், பக்தர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. ஆசிரமத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு சச்சிதானந்தா கூறினார்.


நித்யானந்தா பணப் பரிவர்த்தனை: சென்னை போலீஸ் விசாரணை :சென்னை: ""சாமியார் நித்யானந்தாவின் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரித்து வருகிறோம்,'' என, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நித்யானந்தாவிற்கு எதிராக பெண்கள் யாரும் கற்பழிப்பு புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா மீது புகார் கொடுத்த லெனின் போலீஸ் கட்டுப்பாட்டில் இல்லை. காந்தப்படுக்கை வழக்கில் லெனினுக்கு தொடர்பு இருக்கிறதா என தெரியவில்லை; விசாரிக்கிறோம்.நித்யானந்தா தமிழகத்தில் எங்கெங்கு எப்போதெல்லாம் வந்துள்ளார், எங்கு தங்கினார், அவரது பண பரிவர்த்தனை ஆகியவை குறித்து முதற்கட்ட விசாரணையில் விசாரித்து வருகிறோம். தனிப்படை போலீசார் வெளிமாநிலம் சென்று விசாரிக்கவில்லை.இங்கு தான் விசாரித்து வருகின்றனர். கொலை மிரட்டல் வழக்கை சேலம் போலீசார் விசாரிக்கின்றனர். நித்யானந்தா மீது லெனின் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக போலீசாருக்கு மாற்ற டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளேன்.வழக்கு விசாரணை தொடர்பாக, கர்நாடகா மற்றும் சேலம் போலீசாருக்கு சென்னை போலீசார் தேவையான உதவிகளை செய்வர். நித்யானந்தாவுக்கு எதிரான மோசடி வழக்கை சென்னை போலீசார் விசாரிப்பர்.இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Daily thanthi

நித்யானந்தா மீது புகார் கொடுத்த சீடர் லெனின் கருப்பன் கைது ஆவாரா?
பரபரப்பு தகவல்கள்


சென்னை, மார்ச்.9-

சுவாமி நித்யானந்தா மீது புகார் கொடுத்த அவரது சீடர் லெனின் கருப்பனை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நேற்று பரபரப்பான புகார் மனு கொடுக்கப்பட்டது.

தினந்தோறும் திகில் தகவல்கள்

நித்யானந்தா சாமியோடு நடிகை ரஞ்சிதாவை இணைத்து ஆபாச படங்கள் வெளியானதை தொடர்ந்து தினந்தோறும் இதுபற்றி பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நித்யானந்தா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் கொடுத்த புகார் அடிப்படையில், மோசடி வழக்கு ஒன்றும், நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கற்பழிப்பு வழக்கு கர்நாடக மாநில போலீசுக்கு மாற்றப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சீடர் மீது புகார்

இந்த நிலையில், நித்யானந்தா மீது புகார் கொடுத்த அவரது சீடர் லெனின் கருப்பன் மீதும் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திடுக்கிடும் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது. இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன.

இந்து சமயத்தை அவமானப்படுத்த...

மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனர் பேட்டி

இதற்கிடையில், லெனின் எங்கே இருக்கிறார்?, அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளாரா? என்பது பற்றி கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த கமிஷனர் ராஜேந்திரன், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்று தெரிவித்தார்.

லெனின் மீது காந்த படுக்கை மோசடி வழக்கு உள்ளதா? என்று கேட்டபோது, `எனக்கு அதுபற்றி தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா' என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்பதாக கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லை - கமிஷனர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010, 11:59[IST]

சென்னை: நித்தியானந்தா மீது இதுவரை எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கு கர்நாடக போலீசுக்கு மாற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளேன். நித்யானந்தா மீதான மோசடி வழக்கை நாங்கள் தான் விசாரிப்போம். கற்பழிப்பு வழக்கில் கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் கர்நாடக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். கொலை மிரட்டல் சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது. நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா பற்றி விசாரிக்க வெளிமாநிலங்களுக்கு இதுவரை தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை. நித்யானந்தா சென்னைக்கு வரும்போது எங்கெங்கு தங்குவார், யார், யார் அவரை சந்திப்பார்கள், யார், யாரோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, அவரது பண பரிவர்த்தனை எப்படி நடைபெற்றது என்பது பற்றி இப்போது பூர்வாங்க விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மோசடி வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கண்டிப்பாக விசாரிப்போம். கர்நாடக போலீசுக்கு, தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றார். லெனின் கருப்பனுக்குத்தான் சிக்கல்? இதற்கிடையே, நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை வீடியோவில் படம் பிடித்த அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். அதில், நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது. இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன. மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. லெனின் எங்கே...? இதற்கிடையே கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து, அவரிடம் நித்தியானந்தா தொடர்பான புதிய வீடியோவைக் கொடுத்துத புகார் செய்த லெனின் கருப்பன் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரனிடம் கூறுகையில், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை. காந்தப் படுக்கை மோசடி குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்கிறேன் என்றார் ராஜேந்திரன்.

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 8 மார்ச், 2010

அரட்டை அரங்கம் - Arattai Arngam

அரட்டை அரங்கமா? வெறும் வாய் பேச்சா?

கடந்த ஞாயிறு(7-3-2010) அன்று சன் டீவியின் அரட்டை அரங்கம் பார்த்துக் கொண்டிருந்தேன். காதல் திருமணம் சிறந்தா? பெரியவர்கள் பார்த்தி வைக்கும் திருமணம் சிறந்ததா? என்று பேசினார்கள்.

அதில் ஒரு இளைஞர் முதலில் பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தை ஒரு பிடி பிடித்தார். பின்னர் காதல் திருமணமி செய்பவர்களையும் ஒரு பிடி பிடித்தார். அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கை லட்சியத்தை சொன்னார்.

அவரின் வாழ்க்கை லட்சியம் இதோ - அழகான பெண்களுடன் சுற்றுவது, கடலை போடுவது, இரவானால் சரக்கு அடிப்பது. தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை லட்சியம் எவ்வளவு உயர்ந்ததாக உள்ளது. இதில் எதிரணியில் பேசிய பெண் போன மாதம் அவளுடன் சுற்றி கொண்டிருந்தாயே என்றதற்கு அது போன மாதம். இது இந்த மாதம் என்கிறார்.

எனக்கு இதில் சில விசயங்கள் புரியவில்லை.

1.இவர்கள் உண்மையைத் தான் பேசுகிறார்களா?

2.இல்லையென்றால் ஒரு மைக்கும் மேடையும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கும் தமிழக அரசியல் வாதிகளை போன்ற எண்ணமா?

3. இவர்கள் இப்படி பேசுவது உண்மையானால் அதன் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், சுற்றத்தார், பெண் நண்பர்கள் இவர்களை மதிப்பார்களா?

மறக்காம வோட்டுப் போடுங்க