சிறந்த வருமான வாய்ப்பு

இது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்.

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1000-க்கு குறையாமல் மளிகைப் பொருட்கள் வாங்குங்கள், ரூ.250 சேமியுங்கள். அத்துடன் சிறந்த வருமான வாய்ப்பையும் பெறுங்கள்.

அலைபேசி-9043584331

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

சூரத் நகரில் கருப்பு நிற மழை

குஜராத்தில் மாநிலத்தில் உள்ள சூரத் ஒரு சிறந்த தொழில் நகரம் ஆகும். இந்நகரம் ஆடைகள் மற்றும் வைரத் தொழில் ஆகியவற்றுக்கு உலகப்புகழ் பெற்றது ஆகும்.

இங்கு நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது.சிறிது நேரத்தில் மழை கருப்பு நிறத்தில் பெய்ய ஆரம்பித்தது. சூரத் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளிமண்டலத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது இதுபோல கருப்பு மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சூரத்தில் ஜவுளி, சாய தொழில்கள் நடப்பதால் இதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று குஜராத் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கருப்பு மழை பெய்ததாக தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் கூறினர்.

இதற்கிடையே கருப்பு மழை நீர் பரிசோதிக்கப்பட்டது. அதில் அமிலத்தன்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. மழை நீரின் நிறம் ஏன் கருப்பானது என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது.

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 30 ஆகஸ்ட், 2010

உங்கள் கண்களை ஏமாற்றும் மாயப் புகைப்படங்கள்

தண்ணீர் செல்லும் பாதையை கவனியுங்கள்

கருப்புப் புள்ளிகளை எண்ணிச் சொல்லுங்கள்

படத்தில் கிடைமட்ட கோடுகள் நேராக உள்ளதா? சாய்வாக உள்ளதா?
எல்லாமே நேர்க்கோடுகள்தான். ஒவ்வொரு பட்டையாக தனித்தனியாக பார்க்கவும்.


வட்டத்தின் நடுவே வரையப்பட்டுள்ள சதுரம் நேராக உள்ளதா? வளைந்துள்ளதா?
படத்தில் உள்ளது நேர்க்கோட்டு சதுரம்தான். நம்ப முடியவில்லையென்றால் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் கோனத்திலேயே பார்க்கவும்.


முடிவில்லாமல் ஏறியிறங்கும் மாடிப்படிகள்

மறக்காம வோட்டுப் போடுங்க


வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அணு விபத்து இழப்பீடு மசோதா – என்னதான் நடந்தது?

அமெரிக்கா, இந்தியா இடையே 2008ல் ஏற்பட்ட சிவில் அணு ஒப்பந்தத்தை அமல்படுத்த, அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை இந்தியா நிறைவேற்ற வேண்டும். அதன்படி, நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 8ம் தேதி இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் இந்தியாவுக்கு பாதகமாக இருப்பதாக பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அணு சக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு அளிப்பதற்காக ரூ.500 கோடி முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், அணு சக்தி நிலையம் அமைப்பதற்கான மூலப்பொருட்களை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படாமல் உள்ளன.

ஆகவே நம் நாட்டு மக்களின் நலன் காக்கும் பொருட்டு இந்த இரண்டு அம்சங்களையும் திருத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதாவது, ரூ.500 கோடி முன்வைப்புத் தொகையை ரூ.1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும், அணு நிலையம் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களையும், உற்பத்தியாளர்களையும் இந்த மசோதாவின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்கப்படும் வரை, அணு உலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் கூறின.

இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. காங்கிரஸ் எம்.பி. சுப்பிராம ரெட்டி தலைமையிலான நிலைக்குழு இதை ஆராய்ந்து சமர்பித்த அறிக்கை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை இந்தியாவே நிறைவேற்றுவதால், நம் நாட்டின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது இருக்க வேண்டும் என்று நிலைக்குழுவின் அறிக்கையில் ஒருமனதாக கூறப்பட்டு உள்ளது.

அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதாவில் எதிர்க்கட்சிகள் கேட்டபடியே திருத்தங்களைச் செய்த அரசு, அத்துடன் புதிய பிரிவைச் சேர்த்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

அணுஉலைகளிலோ நிலையங்களிலோ விபத்து நேரிட்டால் அவற்றை தயாரித்து, விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனங்கள்தான் பொறுப்பு என்கிற நிபந்தனையில், வேண்டுமென்றே தரக்குறைவான கருவிகளையும் பாகங்களையும் அவர்கள் விற்பனை செய்திருந்தால் மட்டுமே அவர்களைப் பொறுப்பாகக் கருதி நஷ்ட ஈடு பெற வேண்டும் என்று புதிய திருத்தம் தெரிவிக்கிறது.

அதாவது அணு உலைகளில் விபத்த நடந்தால் அத்தகைய விபத்து நடக்கவேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் அணு உலை சாதனத்தை வழங்கிய அன்னிய நிறுவனம் செயல்பட்டுள்ளது என்பதை நிரூபித்தால் மட்டுமே அதனிடம் இழப்பீடு கோரமுடியும் என்கிறது.

அத்துடன் அணுமின் நிலையங்கள் அரசு நிறுவனங்களாகத் தொடங்கப்படுவதால் நஷ்ட ஈட்டை அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்கிறது என்றும் திருத்தப்பட்ட மசோதாவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் இந்த அணுமின் நிலையங்களில் உள்ள அரசின் பங்கு தனியாருக்கு விற்கப்படமாட்டாது என்று எந்தவித உத்தரவாதமும் தரப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நாட்டை அமெரிக்க அணு உலை முதலாளிகளிடம் அடகு வைக்க காங்கிரஸ் அரசாங்கம் வேகமாக வரிந்துக் கட்டிய போதும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த திருத்தத்தை நீக்க மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் படி Aug 26,2010 அன்று மசோதாவை தாக்கல் செய்து விட்டார்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ஃபயர்ஃபாக்ஸி(Firefox Browser)ன் வேகத்தை அதிகப்படுத்த டிப்ஸ்

ஃபயர்ஃபாக்ஸி(Firefox Browser)ன் வேகத்தை அதிகப்படுத்த 12 டிப்ஸ்கள் கொடுத்துள்ளேன். பயன் படுத்தி பாருங்கள்.

முக்கிய குறிப்பு: மாற்றங்களை செய்வதற்கு முன்பு ஃபயர்ஃபாக்ஸ் ப்ரொபைலை பேக்அப் எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு கீழ்க்கண்ட ஃபயர்ஃபாக்ஸ் ஆட்ஆன் உதவும்.

1. அட்ரஸ் பாரில் about:config என்று கொடுத்து என்டர் தட்டவும். தட்டியவுடன் கீழ்க்கண்டவாறு மெஸ்ஸேஜ் தோன்றும்.
இதில் I'll be care full, I promise! என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

2. இப்போது கீழே உள்ளது போல் ஃபில்டர் சர்ச் பார் தோன்றும்.
இதில் network.http.pipelining என்று டைப் செய்தால் அதன் மதிப்புகள்  தோன்றும். வேல்யூ ஃபீல்டில் ஃபால்ஸ்(False) என்று இருந்தால் டபுள் க்ளிக் செய்து அதை ட்ரூ(True) என்று மாற்ற வேண்டும்.

3. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.http.pipelining.maxrequests என்று டைப் செய்து வருவதில் டபுள் க்ளிக் செய்து அதன் மதிப்பை 8 என மாற்ற வேண்டும்.

4. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.http.proxy.pipelining என்று டைப் செய்து அதன் மதிப்பை ட்ரூ(True) என மாற்ற வேண்டும்.

5. இப்போது ஃபில்டர் சர்ச் பாரில் network.dns.disableIPv6 என்று டைப் செய்து அதன் மதிப்பை ட்ரூ(True) என மாற்ற வேண்டும்.

6. இப்போது புதிதாக ஒரு கன்ட்ரோல்-ஐ உருவாக்க வேண்டும். அதற்கு இப்போது உள்ள விண்டோவிலேயே ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் க்ளிக் செய்தால் வரும் பாப் அப் மெனுவில் உள்ள நியூ என்பதையும் பின்னர் பூலியன் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். இப்போது தோன்றும் பாக்ஸில் content.interrupt.parsing என்று கொடுத்து ok கொடுத்தால் அதன் வேல்யூ செட் செய்யும் பாக்ஸ் வரும். அதில் ட்ரூ(True) என்பதை தேர்வு செய்து பின்னர் ok குடுக்க வேண்டும்.

7. இப்போது இன்னொரு கன்ட்ரோல்-ஐ புதிதாக உருவாக்க வேண்டும். ரைட் க்ளிக் செய்து அதில் நியூ அதன் பின்னர் இன்டிஜர் என்பதை தெரிவு செய்ய வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டொவில் content.max.tokenizing.time என்று டைப் செய்து ok கொடுக்க வேண்டும். இப்போது வரும் பாப் அப் விண்டொவில் 2250000 என்று டைப் செய்து ok கொடுக்க வேண்டும்.

8. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.notify.interval என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 750000 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

9. மேலே கண்ட வழிமுறையி 6ன் படி புதிதாக ஒரு பூலியன் கண்ட்ரோலை உருவாக்க வேண்டும். அதன் பெயராக content.notify.ontimer என்று கொடுத்து அதன் மதிப்பாக ட்ரூ(true) என்று கொடுக்க வேண்டும்.

10. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.notify.backoffcount என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 5 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

11. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் content.switch.threshold என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 750000 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

12. மேலே கண்ட வழிமுறை 7-இல் உள்ளவாறு இண்டிஜர் என்பதை தெரிவு செய்து வரும் பாப் அப் விண்டோவில் nglayout.initialpaint.delay என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும். தோன்றும் பாப் அப் விண்டோவில் 0 என்று டைப் செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

அவ்வளவுதான் முடிந்தது. இப்போது ஃபயர்ஃபாக்ஸை ரீஸ்டார்ட் செய்யுங்கள். வேகம் அதிகமாகியிருப்பதை உணர்வீர்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க


செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கண்டனம்

தன்னுடைய charuonline.com என்ற தளத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்… என்ற தலைப்பில் கீழே கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சாருலதா நிவேதிதா.

பாலாவுக்கு,

தமிழில் எழுத்துக் கூட்டி நாலு வாக்கியம் எழுதத் தெரிகிறதா, உடனே ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு சினிமா விமர்சனமும் எழுதி இங்கே எழுத்தாளன் ஆகி விடலாம். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் வெளியில் தெரிய வைக்கவே அந்த லிங்கைக் கொடுத்தேன்.

சாரு

இதை சொல்றதுக்கு இவர் யாருன்னுதான் புரியல. நித்தியானந்தா விவகாரத்துல விஜய் டீவியிலெ மன்னிப்பு கேட்டுட்டு அப்புறம் என்னை வலுக்கட்டாயமா மன்னிப்பு கேட்க வெச்சுட்டாங்கன்னு தன்னோட ப்ளாக்ல வீராவேசமா பதிவு போட்ட மாவீரர்தானே இவர். ஒருத்தர் எழுத்தாளனா இல்லையான்னு தீர்மானம் பன்ன வேண்டியவங்க வாசகர்கள்தான்.
நல்லாயிருந்தா ஆதரவு கொடுக்கப் போறாங்க, இல்லைன்னா குப்பையிலே தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க.

ஒரு படத்துலே காமெடியன் ஹீரோகிட்டே சொல்வாரு, நேத்து வந்த சின்ன பசங்க எல்லாம் பன்ச் டயலாக் சொல்றாங்க, அதனாலே இந்த தடவை நான் சொல்றேன்னு சொல்வாரு.

நிஜமாவே சின்ன பையனை பசங்க படத்துல பன்ச் டயலாக் சொல்ல வெச்சாங்க. அது நல்லா இல்லாம போயிருச்சா.

ஒரு ஹீரோவை பன்ச் டயலாக் சொல்ல வைக்கிறது இயக்குனரோட விருப்பம், அதை ஏத்துக்கிறது ரசிகர்களோட விருப்பம். அதே மாதிரி எழுத்தாளனை ஏத்துக்கிறது, ஏத்துக்காதது வாசகர்கள் விருப்பம். நடவுல இவங்க யாரு இதுக்கெல்லாம் நாட்டாமை.

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தற்காலிக ஈமெயில் முகவரி

Temporary Email ID

நாம் பல சமயங்களில் பல்வேறுத் தளங்களுக்கு செல்கிறோம். அத்தளங்களில் இணைய நம்முடைய ஈமெயில் முகவரியை பதிவு செய்யச் சொல்வார்கள். அத்தளம் நம்பகமானதுதானா என்று நமக்கு தெரியாது.

அதே போல் பல தளங்களில் செய்திகளை படித்துவிட்டு அதற்கு பின்னூட்டம் இட விரும்புவோம். அதற்கு ஈமெயில் முகவரியை கேட்பார்கள். நம்முடைய அசல் ஈமெயில் ஐடியை கொடுக்க மனம் வராது.

இது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்வது தற்காலிக ஈமெயில் முகவரிகளாகும். இதில் பல வகைகள் உள்ளன. 10 நிமிடம் முதல் நாம் விரும்பும் நாட்கள் வரை. அதன் பிறகு அந்த ஈமெயில் முகவரி தானாகவே எக்ஸ்ஃபயர் ஆகிவிடும்.

இங்கே சில தற்காலிக ஈமெயில் முகவரி தரும் தளங்களை அளித்துள்ளேன்.

1. guerrillamail

2. mailinator

3. spambox

மறக்காம வோட்டுப் போடுங்க


புதன், 21 ஜூலை, 2010

ஆறு குவளை (1 1/2 லிட்டர்) தண்ணீர் செய்யும் அற்புதங்கள்

தண்ணீர் சிகிச்சை (Water therapy)

அக்குபஞ்சர், அக்குப்ரஷர், காந்த சிகிச்சை, மாக்சா என்ற ஜப்பானிய சூடு பயிற்சி முறை ஆகிய ஐந்து முறைகளால், குணப்படுத்த முடியாத எல்லா விதமான நோய்களையும் குடி தண்ணீரால் குணப்படுத்தலாமென்று ஜப்பான் உடல் நலிவு கழகம் (Japanese Sickness Association) கூறியுள்ளது. அதற்கு அவர்கள் கூறியுள்ள சிகிச்சை முறையே தண்ணீர் சிகிச்சை (Water Therapy) ஆகும்.

தண்ணீர் சிகிச்சையை (Water Therapy) செய்யும் முறை

தண்ணீர் சிகிச்சை (Water Therapy) என்றதும் என்னவோ எதோவென்று பயந்து விடாதீர்கள். நாம் தினமும் குடிக்கும் நல்ல தண்ணீர் மட்டுமே இந்த சிகிச்சைக்கு போதுமானதாகும். அதை எப்போது, எவ்வாறு, எவ்வளவு குடிக்க வேண்டுமென்பதே தண்ணீர் சிகிச்சை(Water Therapy)யாகும்.

காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன்பாகவே சரியாக ஒன்றறை லிட்டர் {ஒன்றறை லிட்டர் தண்ணீர் எவ்வளவு டம்ப்ளர் அல்லது குவளை ஆகுமென்று அளந்து வைத்துக் கொள்வது நல்லது. சுமாராக 6 டம்ப்ளர் அளவிற்கு வரும்) தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட வேண்டும்.

ஆரம்பத்தில் ஒன்றறை லிட்டர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட முடியாது. கொஞ்சம் சிரமாமக இருக்கும். ஆரம்பக் காலங்களில் முதலில் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவும் குடித்து விட்டு சிறிது நேரம் நடந்து விட்டு வந்து மீதமுள்ள தண்ணீர் அனைத்தையும் குடித்து விட வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டியவை

தண்ணீரைக் குடிப்பதற்கு முன் ஒன்றறை மணி நேரமும், குடித்த பின் ஒன்றறை மணி நேரமும் வேறு காபி, டீ உள்ளிட்ட எவ்வித பானங்களையோ, நொறுக்கு தீனியோ சாப்பிட்டிருக்க கூடாது.

காலையில் பல் விளக்கும் முன்பே குடிக்க வேண்டுமென்பதால் முதல் நாளிரவே பல் துலக்கிக் கொள்வது நல்லது.

முதல் நாளிரவே தண்ணீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

மூட்டுவாதம் (Arthritis), வாயுப் பிடிப்பு முதலிய நோயுள்ளவர்கள் ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை இதை செய்து வந்தால் நல்லது. காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு ஒன்றறை மணி நேரம் முன்பு தண்ணீர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

தண்ணீர் சிகிச்சை (Water Therapy) மூலம் குணமாகும் நோய்கள்

கீழ்வாதம் (Rheumatism)
பொதுவான பக்கவாதம் (General Paralysis)
ஊளைச்சதை (Obesity)
மூட்டுவலி (Arthritis)
காதில் இரைச்சல் (Sinusitis)
மிகையான இருதய துடிப்பு (Tachycardia)
மயக்கம் (Giddiness, Anesthesia )
தலைவலி (Headache)
இரத்த அழுத்தம் (B/P Hypertension)
இரத்த சோகை (Anemia)
நீரிழிவு (Diabetes)
கண் சம்பந்தமான நோய்கள் (Eye Troubles)
கண் சிவப்பு (Ophthalmic Hemorrhage and Ophthalmic)
ஒழுங்கில்லாத மாதவிடாய் (Irregular Menstruation)
கருப்பைப் புற்றுநோய் (Uterine Cancer)
மார்பகப் புற்றுநோய் (Cancer or Mammary glands or breast cancer)
தொண்டை சம்பந்தமான நோய்கள் (Laryngitis)
இருமல் (Cough)
ஆஸ்த்மா (Asthma)
சளி (Bronchits)
சயரோகம் (Pulmonary Tuberculosis T.B.)
மூளைக்காய்ச்சல் (Meningitis)
கல்லீரல் சம்பந்தமான நோய்கள் (Hepatic Diseases)
சிறுநீரகக் குழாய் சம்பந்தமான நோய்கள் (Urogenital Diseases)
பித்த கோளாறுகள் (Hyperacidity)
வாய்வுக் கோளாறுகள், வயிற்றுப்பொருமல் (Gastritis)
மூலம் (Rectal Prolapse)
மலச்சிக்கல் (Constipation)
உதிரப்போக்கு (Hemorrhoids)

மறக்காம வோட்டுப் போடுங்க


சனி, 17 ஜூலை, 2010

சமச்சீர் கல்வி

இந்திரன் : வாங்க சந்திரன், செம்மொழி மாநாட்டுக்கு போயிருந்தீங்க போலேயிருக்கு.

சந்திரன் : கோயமுத்தூரிலேயே இருந்துக்கிட்டு போகாம இருக்க முடியுமா?

இந்திரன் : மாநாடு நடந்த இடம், இனியவை நாற்பது பேரணி எல்லாம் பார்த்தீங்களா?

சந்திரன் : என்ன அருமையான அரங்க அமைப்பு, இனியவை நாற்பதை எவ்வளவு அருமையா அமைச்சிருந்தாங்க. வருகிற மக்களுக்காக செய்திருந்த ஏற்பாடுகள் எல்லாமே அருமையா இருந்தது போங்க.


இந்திரன் : உலகமுழுதும் இருந்து தமிழறிஞர்கள் வந்திருந்தாங்களே, பட்டிமன்றம், கவியரங்கம் எல்லாம் நல்லா இருந்திருக்குமே?

சந்திரன் : என்னையென்ன வேலையில்லாத வெட்டிபயல்னு நினைச்சீங்களா

இந்திரன் : ஏங்க கோபப்படுறீங்க, அப்போ மாநாட்டுக்கு சுத்திப் பார்க்கத்தான் போனிங்களா?

சந்திரன் : நான் மட்டுமில்லீங்க, வந்திருந்த 90 சதவீத மக்கள் அதுக்குத்தான் வந்தாங்க. மாநாடு முடிஞ்சும் ஒரு வாரத்துக்கு கூட்டம் வந்த்ததை பத்திரிக்கையிலே பார்த்திருப்பீங்களே. அவங்கள்ளாம் பட்டிமன்றத்தையும், கவியரங்கத்தையுமா பார்க்க வந்தாங்க


இந்திரன் : அப்போ இனிமே தமிழ் புது வேகத்தோட வளரும்னு சொன்னாங்களே, அதெல்லாம் சும்மாதானா?

சந்திரன் : இந்த மாநாட்டுனால தமிழ் வளருதோ இல்லியோ, கட்சிக்காரங்க நிறைய பேர் வளர்ந்திருப்பாங்க.

இந்திரன் : இந்த மாதிரி நேரங்கள்ள நடக்கிறதுதான். தமிழை வளர்க்கிறதுக்கு அடிப்படையான ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குது. அதைப் பயன்படுத்தாமே வீணடிச்சுட்டாங்களே.

சந்திரன் : எதைச் சொல்றீங்க?

இந்திரன் : நான் மாநாட்டை சொல்லலீங்க. சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வந்தாங்களே, அதைத்தான் சொல்றேன். நகர்புற மாணவனுக்கும் கிராமப்புற மாணவனுக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்கனும்னு கொண்டு வந்ததுதான் சமச்சீர் கல்வி. இந்த வருடதிலேயிருந்து முதல் வகுப்பிலேயும், ஆறாம் வகுப்பிலேயும் அறிமுகப்படுத்தியிருக்காங்க.

சந்திரன் : நல்ல விசயம் தானே

இந்திரன் : நல்ல விசயம் தான். ஆனா நான் என்ன சொல்ல வற்றேன்னு கீழேயிருக்கிற ஒன்னாம் வகுப்பு புத்தகங்களின் படங்களை பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.



சந்திரன் : என்னங்க இது, தமிழ் பாடம் ஒன்னுதான் இருக்கு. மத்ததெல்லாம் english-லே இருக்கு

இந்திரன் : சமுதாயத்திலே புதுசா ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தனும்னா அதை குழந்தைகள் கிட்டே இருந்து ஆரம்பிங்கன்னு அப்துல் கலாம் சொன்னாரு, ஆரம்ப கல்வியை தாய் மொழியிலே படிக்கிறது குழந்தைங்க திறனை வளர்க்கும்னு அறிவியல் அறிஞர்கள் சொல்றாங்க. ஆனா நம்ம அரசாங்கம் என்ன செய்யுது. அஸ்திவாரத்தை பத்தி கவலை படாம மேல் மாடியில உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அப்படிங்கிற பேருல கோடிக் கணக்குல செலவு செஞ்சு அலங்காரம் பன்னிட்டிருக்குது. ஒரு படத்துல வடிவேல் சொல்வாரு Building strong ஆ இருக்கு basement தான் week னு. அப்படித்தான் இருக்குது நம்ம தாய்மொழியோட நிலமையும்.

சந்திரன் : நல்லா சொன்னீங்க போங்க

மறக்காம வோட்டுப் போடுங்க


வியாழன், 24 ஜூன், 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடே வருக

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக கோவையை அழகு படுத்தும் வேலைகள் சிறப்பாக நடந்துள்ளன. அது தொடர்பான புகைப்படங்கள்:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 01

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 02

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 03

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 04

23-06-2010 அன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.

இன்றைய முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4.00 மணியளவில் நடந்த இனியவை நாற்பது என்ற தலைப்பில் நடந்த அலங்கார ஊர்வலமாகும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 05

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 06

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 07

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 08

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் படங்கள் - World Classical Tamil Conference Photos - 09

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

சிறப்பாக நடந்தேற நாமும் வாழ்த்துவோம்.

மறக்காம வோட்டுப் போடுங்க


செவ்வாய், 15 ஜூன், 2010

பாதுகாப்பு திருக்குரள்

நான் சமீபத்தில் சென்றிருந்த ஒரு பெரிய இஞ்ஜினியரிங் தொழிற்சாலையில் கீழ்கண்ட திருக் குரள்களை கண்டேன். அனைத்தும் பாதுகாப்பு குறித்தவை. நன்றாக இருந்த்தால் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.

1. தனக் கேதும் ஆபத்து நேராதென் றெண்ணும்
    மனநிலை மாற்றல் அறிவு.

2. எச்செயல் செயினும் செய்யற்க அச்செயல்
    ஆபத்துண் டாக்கு மெனின்

3.  எண்ணும் எழுத்தும் கல்வியின் அரிச்சுவடி
     உழைப்பும் பாதுகாப்பும் தொழிலின் அரிச்சுவடி

4.  தன்னைத்தான் காக்கும் மனப்பான்மை இல்லாதான்
     தன்னையே நாடும் விபத்து.

5.  எதுகையும் மோனையும் கவிதைக்கு அழகு
     எச்சரிக்கையும் பாதுகாப்பும் தொழிலுக்கழகு.

6.  பாதுகாப்பே நோக்கமாய் பணிசெயின் ஆபத்தால்
     யாண்டும் இடும்பை இல.

மறக்காம வோட்டுப் போடுங்க


செவ்வாய், 13 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு முதல் உலகெங்கும் வறுமை நீங்கி அமைதியாகவும் ஒற்றுமையாகவும் திகழ ஆண்டவனை பிரார்த்திப்போம். கணிணி இயலில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளுக்கு ஏற்றதான தமிழ் வார்த்தைகளை கொடுத்துள்ளேன். இது முழுமையானதல்ல. ஆர்வமுள்ளோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய பதிவுகளை அனுப்பலாம்.

Expert System - எக்ஸ்பர்ட் சிஸ்டம் தேர்ந்தவர் அமைப்பு
File - ஃபைல் கோப்பு
Firmware - ஃபர்ம்வேர் நிலைப்பொருள்
Flow Chart - ஃப்ளோசார்ட் போக்குப்படம்
Function - ஃப்ங்ஷன் செயல்முறை
Function Key - ஃப்ங்ஷன் கீ செயல்முறை விசை
Garbage - கார்பேஜ் குப்பை
Graphics - கிராஃபிக்ஸ் வரைமுறைகள்
Half Duplex - ஹல்ஃப் ட்யூப்லக்ஸ் பாதி இருவழி
Hand Shake - ஹேண்ட் ஷேக் கை குலுக்கு
Hard Copy - ஹார்டு காப்பி நிஜ நகல்
Hardware - ஹார்ட்வேர் வன்பொருள்
Image Processing - இமேஜ் ப்ராஸஸிங் பட அலசல்
Index Register - இண்டெக்ஸ் ரெஜிஸ்டர் சுட்டுப் பதிவேடு
Instruction - இன்ஸ்ட்ரக்‌ஷன் ஆணை
Intiger - இன்டிஜர் முழு எண்
Interface - இண்டெர்ஃபேஸ் இடை இணைப்பு
Interrupt - இண்டர்ரப்ட் குறுக்கீடு
Iteration - இட்டரேஷன் திரும்பச் செயல்
Justify - ஜஸ்ட்டிஃபை வரிசைப்படுத்து
Lan - லேன் வளாக வலை
Laser - லேஸர் சீரொளி
Laptop - லேப்டாப் மடி கணிணி
Linear Programming - லீனியர் ப்ரொக்ராமிங் நேர்கோட்டு நிரலமைப்பு
Line Printer - லைன் ப்ரிண்டர் வரி அச்சியந்திரம்
Magnetic Card - மேக்னடிக் கார்ட் காந்த அட்டை
Main Memory - மெய்ன் மெமரி பிரதான நினைவகம்
Mnemonic - நெமோனிக் நினைவுபடுத்தி
Mother Board - மதர் போர்ட் தாய் பலகை
Multi Access - மல்ட்டி அக்ஸஸ் பல் அணுகல்
Multiplexer - மல்ட்டிப்ளெக்ஸர் பல் பயன் தொகை
Natural Language - நேச்சுரல் லாங்வேஜ் இயர்கை மொழி
Network - நெட்வொர்க் வலை இணைப்பு
NLQ (Near Letter Quality) - நியர் லெட்டர் க்வாலிட்டி எழுத்து நேர்த்தி
Non Volatile - நான் வாலடைல் அழியாத
Numeric - ந்யூமெரிக் எண்
Neural Net - நியுரல் நெட் நரம்பு வலை
Noise - நாய்ஸ் ஓசை
Object Code - ஆப்ஜெக்ட் கோடு இலக்கு ஆணை
Operand - ஆப்பெரண்ட் செயப்படு பொருள்
Object Oriented - ஆப்ஜெக்ட் ஓரியண்டட் பொருள் சார்ந்த
Office Automation - ஆஃபிஸ் ஆட்டோமேஷன் அலுவலக தன்னியக்கம்
Operating System - ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயலாக்க ஆணைத்தொகை
OCR (Optical Cheracter Recognition) - ஆப்டிசல் கேரக்டர் ரெகக்னிஷன் எழுத்து அடையாளம்
Optical Disc - ஆப்டிகல் டிஸ்க் ஒளித் தகடு
Optical Fibre - ஆப்டிகல் ஃபைபர் ஒளியிழை
Parallel Processing - பேரல்லல் ப்ராஸஸிங் இணை செயல்பாடு
Pattern Recognition - பேட்டர்ன் ரெகக்னிஷன் வடிவ அடையாளம்
Pixel - பிக்ஸெல் படத்துண்டு

மறக்காம வோட்டுப் போடுங்க


வியாழன், 1 ஏப்ரல், 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்காக இணைய தளம் வடிவமைக்கும் போட்டி

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்காக இணைய தளம் வடிவமைக்கும் போட்டி நடத்த படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் பயிலும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

கட்டுரைகள் மாணவர்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்.

படைப்புகள் தனிப்பட்ட நபர்கள், மதம், அரசியல் ஆகியவற்றை விமர்சிக்கும் படியாக இருக்க கூடாது.

தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்

இந்த கட்டுரைகள் விக்கிபீடியா(Wikipedia)வில் பதிவேற்றம் செய்ய தக்கவையாக 250 முதல் 500 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டுரை யூனிகோடு(Unicode) ஒருங்கு குறியில் அமைய பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரைகளை ஆன்லைனி(Online)லேயே சமர்ப்பிக்கலாம்

இந்த சுட்டியை சொடுக்கி tamilint2010.tn.gov.in வின்னப்பித்தல் மற்றும் மேற்படி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மறக்காம வோட்டுப் போடுங்க


ஞாயிறு, 28 மார்ச், 2010

காலாவதியான மருந்துகள் - ஆரம்பம் முதல் நேற்றுவரை

சென்னை மூலம் நாட்டில் பரவும் சீன போலி மருந்து

ஜூன் 18, 2009

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரில் ஆப்ரிக்காவில் போலி மருந்து விற்பனை செய்த சீனா, சென்னை துறைமுகம் வழியாக இந்தியாவுக்கும் போலி மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம் சென்னையில் துறைமுக பணியில் இருக்கும் துணை மருந்து கண்காணிப்பாளர் சாந்தி குணசேகரன் என்பவர் மூன்று போலி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து சென்னை துறை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மருந்துகளை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தாவில் இருக்கும் மத்திய அரசின் சோதனை கூடத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து என்வீ டிரக்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு பொறுப்பாளர் ராகேஷ் ஜெயின் கூறுகையில், எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த மருந்து பொருட்கள் எங்களது பெயருக்கு தான் வந்திருக்கிறது என்றாலும், அதை நாங்கள் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. ஒரு மும்பை நிறுவனத்தின் மூலம் தான் பெறுகிறோம். எங்களுக்கு சீன ஏற்றுமதியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் எங்கள் மீது எந்த குற்றமுமி்ல்லை என்றார் அவர்.

ஷீதல் பார்மா நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ் ஷா கூறுகையில், இந்த மருந்துகள் இந்தியா மற்றும் சீன துறைமுகங்களில் சோதனையிட்ட பின்னர் தான் வருகிறது. ஆனால் அதையும் மீறி எப்படி வருகிறது என்பது தெரியவில்லை. எங்களுக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என்றார்.

இது குறித்து குஜராத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர் ஒருவர் கூறுகையி்ல், மருந்து பொருட்களை சிறு தொழிலாக செய்து வரும் நிறுவனங்கள் எதுவும் நேரிடையாக இறக்குமதி செய்வதில்லை. நாங்கள் மும்பையில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறோம். அவர்கள் கொடுக்கும் மூலப்பொருட்களை கொண்டு நாங்கள் மருந்து தயாரிக்கிறோம். அவர்கள் கொடுப்பது போலியாக இருந்தால் பல மருந்து நிறுவனங்களும் போலி மருந்துகளை தயாரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்றார்.

ஸ்வைன் மருந்து 'டமிஃப்ளூ' குழந்தைகளுக்கு அபாயகரமானது!

புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 2009

டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு உள்ள மாத்திரையான டமிஃப்ளூ, குழந்தைகளுக்கு அபாயகரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த மாத்திரை குழந்தைகளுக்கு அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், டமிஃப்ளூவால் பல்வேறு சிக்கல்களை குழந்தைகள் சந்திப்பதாக ஆய்வுகளும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலைக் கொண்டு வரக் கூடிய அபாயமும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜப்பானில், இந்த மாத்திரைகளை உட்கொண்ட நோயாளிகளுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்ததாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.

இதனால்தான் இந்தியாவில் இந்த மாத்திரிகளை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அரசும் கூட இதை தற்போது குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது. சில்லறை விற்பனைக்கும் தடை உள்ளது என்றார்.

இருப்பினும் விரைவில் சில்லறை விற்பனைக்கு டமிஃப்ளூவை திறந்து விட அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது.

போலி மருந்து மாத்திரையால் சிறுமி சாவு

மார்ச் 23, 2010

சென்னையில் காலாவதியான மருந்து மாத்திரைகளை புத்தம் புதிய மருந்து மாத்திரைகள் போல் தயாரித்து விற்றதால் கீர்த்தி தேவ தர்ஷினி என்ற 3 வயது சிறுமி பலியானள்.

காலாவதியான மருந்து, மாத்திரைகள் தீ வைப்பு

மார்ச் 25,2010

சேலத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை, ஓலையில் போட்டு எரித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர். தமிழகத்தில், பரவலாக மருந்து கடைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்வதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. சென்னையில், காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த மேலும் ஏழு பேர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், காலாவதியான மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மருந்து விற்பனையாளர்கள் உஷார் அடைந்துள்ளனர். கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை மூட்டை கட்டி, குவியல் குவியலாக குப்பை தொட்டிகளில் வீசி வருகின்றனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் நகரில், ஏழு மூட்டைகளில், காலாவதியான மருந்து, மாத்திரைகளை கட்டி மர்ம கும்பல் வீசி சென்றுள்ளது. அதில், மூன்று மூட்டைகளில் இருந்த மருந்து, மாத்திரைகளை கீழே கொட்டி, ஓலையை போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளது. மருந்து, மாத்திரைகளின் பெயர் மற்றும் காலாவதியான குறிப்பு கிடைத்து விடக்கூடாது என்பதால், இவ்வாறு எரித்துள்ளனர்.

தகவலறிந்த போலீசார், மூட்டைகளில் இருந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை கைப்பற்றினர். அவற்றை வீசிய மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், நேற்று முன்தினம், மேட்டூர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகிலுள்ள குப்பை வண்டியில், காலாவதியான மருந்து, மாத்திரைகள், காலாவதி தேதி குறிப்பிடாத டானிக், சாம்பிள் மருந்துகள் பெட்டி பெட்டியாக வீசப்பட்டிருந்தது. அதில், பெரும்பாலானவை குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், இருமல், சளி தீர்ப்பதற்கான மருந்துகள். ஈ.எஸ்.ஐ ., (தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம்) சேலம் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் சம்பத்குமார், இவற்றை ஆய்விற்காக எடுத்து சென்றார்.

சில நாட்களுக்கு முன், கோவையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து 500 பாட்டில்களில் இருமல் மருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டது. பெட்டியில் 60 பாட்டில்கள் இருப்பதற்கு பதில், 100 பாட்டில்கள் இருந்ததால், மருந்து கடை உரிமையாளர்கள் சந்தேகமடைந்தனர். இதைதொடர்ந்து, 400 பாட்டில்களை கோவை டீலருக்கு திருப்பி அனுப்பினர். மருந்து ஆய்வாளர்கள் 100 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் குப்பையில் கொட்டப்பட்ட மாத்திரைகள்: 10 ஆண்டுகள் பழையது

மார்ச் 25, 2010

​ சேலத்தில் காலாவதி ஆன மாத்திரைகள் புதன்கிழமை குப்பையில் கொட்டப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒரு கும்பல் காலாவதி ஆன மருந்து,​​ மாத்திரைகளை சேகரித்து,​​ புதியது போல் மாற்றி மருந்து கடைகளில் விற்பனை செய்து வந்தது அண்மையில் ​கண்டுபிடிக்கப்பட்டது.

மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.​ இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் கிடங்குகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து காலாவதி ஆன மருந்துகளை வியாபாரிகள் ஆங்காங்கே கொட்டி ​வருகின்றனர்.​ இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சுபாஸ் சந்திரபோஸ் நகரில் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான காலாவதி ஆன மாத்திரைகள் ​ கிடப்பதை அப்பகுதி மக்கள் புதன்கிழமை காலை கண்டுபிடித்தனர்.​ இது குறித்துஅன்னதானப்பட்டி போலீஸýக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலி,​​ காலாவதி மருந்துகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் பயந்து போன யாரோ சிலர் அனாசின்,​​ புளுகிளாக்ஸ்-500,​ போஸ்-40,​ காஸ்காக்ஸ்,​​ டிரோபிள்,​​ சிபோ,​​ மூவன் போன்ற பெயர் கொண்ட மூன்று மூட்டை மாத்திரைகளை இரவில் கொண்டு வந்து மக்கள் நடமாட்டம் குறைவான இப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதன் அருகில் இரண்டு இடங்களில் தனித் தனியாக உதிரி கேப்சூல்கள்,​​ மாத்திரைகள்,​​ களிம்பு மருந்துகள் கிடந்தன.​ இவை யாவும் 1991,​ 1998,​ ​ 2001,​ 2003 ஆகிய ​ஆண்டுகளிலேயே காலாவதி ஆகிவிட்டவை என்பது அதன் மேல் உறைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவற்றை இவ்வளவு நாள்களாக வைத்து வியாபாரம் செய்துள்ள மர்ம நபர்கள் அதிகாரிகளுக்கு பயந்து இப்போது இங்கு வந்து போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அங்கிருந்த ஏ.ஐ.டி.யு.சி.​ நிர்வாகி விமலன் தெரிவித்தார்.​ மாத்திரைகள் கொட்டப்பட்டு இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜதுரை,​​ இந்திரா மற்றும் போலீஸôர் அவற்றை மூட்டை கட்டி ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.​ மேலும் அங்கிருந்த உதிரி மாத்திரைகளை தீ வைத்து போலீஸôர் எரித்தனர்.​

போலி மருந்து இல்லை:​ சேலம் மண்டலத்தில் போலி மருந்து,​​ மாத்திரைகள்இல்லை என்று மருந்து கட்டுப்பாடு துணை இயக்குநர் செல்வராஜ் தெரிவித்தார்.

​ இது குறித்து மேலும் அவர் கூறியது:​ போலி மருந்துகள்,​​ காலாவதி மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதால் பயந்து போன சிலர் தங்கள் கைவசம் இருந்த காலாவதியான மருந்து,​​ மாத்திரைகளை மேட்டூர்,​​ சீலநாயக்கன்பட்டியில் ​கொட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த இரண்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.​ ஒருவர் மேட்டூரிலும்,​​ மற்றொருவர் சீலநாயக்கன்பட்டியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.


போ‌லி மரு‌ந்து: ‌‌ம‌க்க‌ள் ‌பீ‌தியடைய வே‌ண்டா‌ம் என அரசு வே‌ண்டுகோ‌ள்

மார்ச் 25, 2010

எ‌‌ல்லா மரு‌ந்து கடைக‌ளிலு‌ம் ‌வி‌ற்கு‌ம் மரு‌ந்துக‌ளு‌ம் போ‌லியானவை அ‌ல்ல எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த மக்கள் நல்வா‌‌ழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ், இதனா‌ல் பொதும‌க்‌க‌ள் ‌பீ‌தி அடைய வே‌ண்டா‌ம் எ‌ன்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய போது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அவ‌ர், காலாவ‌தியான தே‌தியை பெ‌ரிய எழு‌த்த‌ி‌ல் அ‌ச்‌சிட மரு‌ந்து உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ளிட‌ம் வ‌லியுறு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

மரு‌ந்து வா‌ங்கு‌ம்போது தே‌தி முடி‌‌ந்து‌ள்ளதா எ‌ன்பதை பொதும‌க்க‌ள் பா‌ர்‌த்து வா‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றிய சு‌ப்புரா‌ஜ், கடைக‌ளி‌ல் காலாவ‌தியான மரு‌ந்து வை‌த்‌திரு‌ந்தா‌ல் கு‌ற்றம‌ல்ல, இதனை ‌வி‌ற்பனை செ‌ய்ய‌க்கூடாது எ‌ன்றா‌ர்.


கூடுதலாக மரு‌ந்து க‌ட்டு‌ப்பா‌ட்டு ஆ‌‌ய்வாள‌ர்களை ‌நிய‌மி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், செ‌ன்னை‌யி‌ல் காலாவ‌தியான மரு‌ந்துகளை வ‌ி‌ற்பனை செ‌ய்த கு‌ம்பலை ‌பிடி‌க்க காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர‌ முய‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர் எ‌ன்றா‌ர்.

போலீஸ் ரெய்டு எதிரொலி: வேலூர், நெல்லையில் போலி மருந்துகள் எரிப்பு!

மார்ச் 25, 2010

சென்னை: காலாவதியான மருந்துகள் புதுப்பித்து விற்கப்படும் மோசடி அம்பலமானதை அடுத்து தமிழகம் முழுவதும் பல நகரங்களிலும் மருந்து கடை மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக வேலூர் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் பல லட்சம் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இவற்றை எரித்தவர்கள் யார் என கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத்திரை மற்றும் மருந்துகளின் காலாவதி தேதியை அழித்துவிட்டு போலியாக புதிய தேதி அச்சிட்டு ஆபத்தான வகையில் மோசடி விற்பனை சென்னையில் நடந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

காலாவதியான மருந்து மாத்திரைகளை கொடுங்கையூர் குப்பையில் இருந்து சேகரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கோயம்பேட்டில் இதெற்கென தனி தொழிற்சாலை நடத்தி வந்த மீனா ஹெல்த்கேர் என்ற மருந்து நிறுவனத்தையும் போலீசார் சுற்றிவளைத்து சீல் வைத்தனர்.

ஆனால், மருந்து நிறுவனத்தின் உரிமையாளர்களான மீனாட்சி சுந்தரம், பிரதீப் சோர்டியா உட்பட நிர்வாகிகள் தப்பியோடி விட்டனர்.

காலாவதி மருந்துகளை வண்டியில் ஏற்றிவந்த டிரைவர் வெங்கடேசன் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவி என்ற இருவர் மட்டும் போலீசிடம் நேற்று சரணடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில், மருந்து நிறுவன அதிபர்களில் ஒருவரான பிரதீப் சோர்டியாவை போலீசார் கைது செய்தனர்.

காலாவதியான மருந்து விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த இவரை போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னையில் இம்மோசடி விவகாரம் வெடித்த உடனடியாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற கும்பல் இருந்தால் கண்டுபிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருந்து நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பல இடங்களில் பீதியடைந்த மருந்து கடைக்காரர்கள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் உள்ள காலாவதி மருந்துகள் அனைத்தையும் குப்பையில் கொட்டியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.

வேலூரில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் நகரின் பல்வேறு இடங்களில் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் போலி மருந்துகள் என தெரியவந்துள்ளது. வேலூர் எல்.ஐ.சி. காலணி, வேலூர் பைபாஸ் சாலை, பாலாற்றங்கரை என மூன்று இடத்தில் போலி மருந்துகளை கொட்டி எரிந்துள்ளனர்.

இன்று காலை அவை பாதி எரிந்தும், எரியாமலும் கிடந்தை போலீசார் கண்டுபிடித்தனர். போலி மருந்துகளை எரித்தது யார் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலி மருந்துகள் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், எரித்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதேபோல் நெல்லையிலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் ரோடடில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை ஜங்ஷன் பெருமாள் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி பகுதிகளில் மருந்து மொத்த விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்படுவதை அறிந்த விற்பனையாளர்கள் காலாவதியான மருந்துகளை தெருவில் கொட்டியுள்ளனர்.

பெட்டி, பெட்டியாக மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள், டானிக்குகள் கொட்டப்பட்டுள்ளன. பெரும்பாலானவை 2009ம் ஆண்டு காலாவதியானவை ஆகும்.

இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. ரோட்டில் கொட்டப்பட்டுள்ள மருந்துகளை மாநகராட்சி துப்பரவு பணியாளர் லாரியில் எடுத்து சென்றனர்.

மருந்து நிறுவன அதிபர் ​விமான நிலையத்தில் கைது

மார்ச் 26, 2010

காலாவதி மருந்து மோசடியில் கைதாகியுள்ள பிரதீப் சோர்டியா.
சென்னை,​​ மார்ச் 25: காலாவதியான மருந்துகளில் தேதிகளை திருத்தி மறுவிற்பனைக்கு அனுப்பிய மோசடி தொடர்பான வழக்கில் தலைமறைவான மருந்து விற்பனை நிறுவன அதிபர் பிரதீப் சோர்டியாவை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

நெல்லையில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்

மார்ச் 26,2010

திருநெல்வேலி:நெல்லையிலும் காலாவதியான மருந்துகள் தெருக்களில் கொட்டப் பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.சென்னையில் காலாவதியான மருந்து நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மருந்து மொத்த சப்ளை நிறுவனங்கள், மெடிக்கல் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் சோதøனைகள் நடத்தப்படுகின்றன.

நெல்லையில் 500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ளன.நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோவில், கண்ணம்மன் கோவில் தெரு, பெரிய தட்டார்குடி தெரு ஆகிய தெருக்களில் மருந்துகளின் மொத்த ஏஜன்சிகள் உள்ளன. இவற்றில், அதிகாரிகள் சோதனை நடத்துவர் என்ற தகவல் இருந்ததால், மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே குப்பை தொட்டிகளில் மருந்துகளை கொட்டினர். மருந்து பாட்டில்கள் குப்பையில் கிடந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அப்துல் காதர் கூறுகையில், 'நெல்லையில் காலாவதியான மருந்துகளை சப்ளை செய்ததாக தகவல் இல்லை. இருப்பினும், துறை அதிகாரிகள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். வழக்கமாக மருந்து விற்பனை செய்யும் ஏஜன்சிகள், காலாவதியான மருந்துகளை தங்கள் நிறுவனங்களுக்கே அனுப்பி விடுவர்.

அப்படி அனுப்பாதவற்றை பயந்து போய் தெருக்களில் கொட்டியுள்ளனர்.மேலும், பெனட்ரைல் இருமல் மருந்து, கார்பேஸ் எனப்படும் ரத்தக் கொதிப்பு மாத்திரை, வி நர்வ் என்னும் சத்து மாத்திரைகளை சோதனை நடத்துமாறு சென்னை அதிகாரிகள் தெரிவித்தனர். அவைகள் உண்மையான மருந்துகளா எனவும் சோதனை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்:சுகாதார செயலர் சுப்புராஜ் விளக்கம்

மார்ச் 26,2010

சென்னை:காலாவதி மருந்து விவகாரத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்,'' என, சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.சென்னையில் காலாவதியான மருந்துகள், மீண்டும் விற்பனைக்கு வந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாகியுள்ளது.

மருந்துக் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று, 'இது காலாவதியான மருந்தா?' என, கேட்டு வாங்கி வருகின்றனர். மருந்துக் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள காலாவதியான மருந்துகளை குப்பையில் கொட்டி அழித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் தமிழக சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் கடந்தாண்டில் மருந்துக் கடைகள், தயாரிப்பு நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு 20 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. தொடர்ந்து ரெய்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.காலாவதியான மருந்துகள் பிடிபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தற்போது பீதியடைந்துள்ளனர். தமிழகத்தில் 42 ஆயிரத்து 500 மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை மையங்கள் உள்ளன.

மருந்துக் கடைகள் இதில் அதிகம்.சேலத்தில், காலாவதியான மருந்துகளை மருந்து விற்பனை மையங்களை சேர்ந்தவர்கள், குப்பையில் கொட்டி அழித்து மேலும் பீதியை ஏற்படுத்தியுள் ளனர். சட்டப்படி மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் இருக்கத் தான் செய் யும். அவற்றை அழிப்பதற் கென வழிமுறைகள் உள்ளன.

காலாவதியான மருந்துகளை கடைக்காரர்கள், 'இது விற்பனைக்கல்ல' என குறிப்பிட்டு தனியாக வைத்திருக்க வேண் டும். இந்த மருந்துகளை மொத்த விற்பனையாளர்களிடம் அளித்தால் அவர்கள் உற் பத்தியாளர்களிடம் அனுப்பி விடுவர்.மருந்து உற்பத்தியாளர்கள் இவற்றை உரிய முறையில் அழித்து விடுவர். காலாவதியான மருந்து இருக்கிறது என்பதற்காக மருந்து கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது.

காலாவதி மருந்துகள் கடையில் இருந்தால் அதை குற்றம் என கருதி விடவும் முடியாது. எனவே, மருந்துகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. இது போன்ற குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க தற் போது உத்தரவிடப்பட்டுள் ளது. முன்பெல்லாம் தண்டனையும், அபராதமும் மிகக் குறைவாக இருந்தது. கடந் தாண்டு ஆகஸ்ட் முதல் 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய தண்டனை.


காலாவதி மருந்துகளை மீண் டும் விற்பனைக்கு விடுபவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மருந்துக் கடைகள் வளர்ந்த அளவிற்கு மருந்து கட்டுப் பாட்டுத்துறை வளரவில்லை. அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. தற்போது மருந்து ஆய்வாளர்கள் 50 பேர் உள்ளனர். மேலும், 25 பேரை புதிதாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் மருந்துகளில் உள்ள காலாவதி விவரத்தை பார்த்து வாங்குவதில்லை.

சமீபத்திய நிகழ்வுக்குப் பின் தற்போது அனைவரது மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது.துறையின் சார்பில் தற்போது மொத்த விற்பனையாளர்கள், மருந்து தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களுக்கான வழிமுறைகள், விதிகள் குறித்து விளக்கியுள்ளோம். மருந்துக் கடைகளில் பார்மசி படித்தவர் கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.ஆனால், யாரும் நியமிப்பதில்லை. இதுகுறித்தும் அவர்களிடம் வலியுறுத்தப்படும்.

மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்களுக்கு குற்றம் செய்தவர்களை கைது செய்யும் அதிகாரம் இல்லை. இது தொடர் விவகாரத்தில் வேறு சில மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் துறை அதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்தார்.

ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளுங்கள்:மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறும்போது,காலாவதி மருந்துகள் விற்பனை விவகாரத்தில் ஒரு கும்பலே இணைந்துசெயல்பட்டுள்ளது.இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் சிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர். மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் மேலும் தொடரும். இது குறித்து பொதுமக்கள் 044-2433 8421 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.

காலாவதியான மருந்து விற்பனை மோசடி, முக்கிய நபர் நீதிமன்றில் சரண்.

மார்ச் 26, 2010

சென்னை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருப்பது, காலாவதியான மருந்துகள் விற்பனை மோசடி. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே ஏழுபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மீனா ஹெல்த் கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

ஓராண்டில் பலகோடி காலாவதி மருந்துகளை கடத்தினேன்: டிரைவர் வாக்குமூலம்

மார்ச் 26 2010

‘கடந்த ஓராண்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகளை சப்ளை செய்தேன்’ என்று டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காலாவதியான மருந்துகளை சப்ளை செய்ததாக தேடப்பட்டு வந்த டிரைவர் வெங்கடேசன், ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் கொடுங்கையூர் போலீசார் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் வெங்கடேசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:

பெங்களூரில் உள்ள ‘கிரான்டிக்ஸ்’ நிறுவனத்தின் கிளை பூந்தமல்லியில் உள்ளது. அந்த நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறேன். காலாவதியான மருந்து,மாத்திரைகளை வேன்களில் ஏற்றி கொடுங்கையூரில் மருந்து அழிக்கும் இடத்துக்கு கொண்டு செல்வேன். அதற்காக எனக்கு 4 ஆயிரம் ரூபாயை கம்பெனி கொடுக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை இந்த லோடுகளை ஏற்றி செல்வேன். அப்போது மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகளை கொடுங்கையூரை சேர்ந்த ரவி என்ற பிரபாகரன் வாங்கி வந்தார். மருந்துகளை அழிக்க அவரும் உதவி செய்வார். அதற்காக ஒரு வேனுக்கு 1000 ரூபாயை ரவிக்கு கொடுப்பேன். கடந்த ஓராண்டுக்கு முன்பு சேகர், பாஸ்கர் ஆகியோர் எங்களை அணுகி காலாவதி மருந்துகளை கொடுத்தால் ஒரு லோடுக்கு 10 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்தனர்.

வீணாக போகும் மருந்தை யாருக்காவது கொடுத்தால் அவர்களுக்கு பயன்படட்டும் என்பதற்காக மருந்துகளை கொடுத்தேன். எனக்கு கொடுக்கும் 10 ஆயிரத்தில், ரூ.4 ஆயிரத்தை ரவிக்கு கொடுப்பேன். ரவி, அவரது மனைவி மற்றும் ஜானி பாஷா ஆகியோர் நான் கொண்டு வரும் மருந்துகளை வேறு வாகனங்களில் ஏற்றி அனுப்புவார்கள்.

ஓராண்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை சப்ளை செய்துள்ளேன். இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது எனக்கு தெரியாது. காலாவதி மருந்துகளை சாப்பிட்டால் தீமைகள், பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் தெரியாது.

இவ்வாறு தனது வாக்குமூலத்தில் வெங்கடேசன் கூறியுள்ளார்.

மேலும் மருந்துகள் எப்படி கடத்தப்பட்டது என்பது பற்றி போலீசாரிடம் வெங்கடேசன் நடித்து காட்டினார்.

காலாவதி மருந்து மோசடியில் டாக்டர்களும் கைதாக வாய்ப்பு?

மார்ச் 27, 2010

சென்னை,​​ மார்ச் 26: காலாவதி மருந்து மோசடியில் பல பகுதிகளில் உள்ள டாக்டர்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் மருந்து,​​ மாத்திரைகள் உரிய காலத்துக்குள் விற்பனையாகததால் அவை காலாவதியாகிவிடுகின்றன.

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி,​​ காலாவதி மருந்து,​​ மாத்திரைகளை அழிக்கும் நிறுவனங்களிடம் அந்த மருந்துகளை ஒப்படைத்து அழிக்க வேண்டும்.

ஆனால்,​​ பல சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் கம்பெனிகள்,​​ அவற்றை ஒப்படைப்பது கிடையாது.​ மாறாக,​​ காலாவதியாகும் மருந்துகளைச் சேகரித்து,​​ அவற்றின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றைத் திருத்தி,​​ மறு விற்பனைக்கு அனுப்பி மோசடி செய்தது அண்மையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் போலீஸôரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலாவதி மருந்து மோசடி தொடர்பாக மருந்து,​​ மாத்திரைகளில் தேதிகளை திருத்தியவர்கள்,​​ அவற்றை இருப்பு வைத்தவர்கள்,​​ விநியோகித்தவர்கள் என 2 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ ரூ.​ 1.5 கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்களிடம் நடைபெறும் விசாரணையில்,​​ மருந்து மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன.

மருந்து மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனம்,​​ அதிக பிரபலம் இல்லாத பல சிறிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஸ்டாக்கிஸ்ட் உரிமையைப் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம்,​​ காலாவதியான மருந்துகளை கடைகளுக்கு மட்டுமின்றி டாக்டர்கள் பலருக்கும் விநியோகித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, ​​ மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மருத்துவமனைகளில்,​​ சாதாரண தலைவலி,​​ காய்ச்சல் போன்ற நோய்களுக்காக வருபவர்களிடம் டாக்டர்கள்,​​ சீட்டுகளில் வரிசையாக மருந்து,​​ மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதும்,​​ நோயாளிகளிடம் கூடுதல் தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்களே மருந்து,​​ மாத்திரைகளை கொடுப்பதும் அதிகமாக உள்ளது.

டாக்டர்கள், ​​ வேளை வாரியாக பிரித்து கொடுப்பதால் மாத்திரைகள் குறித்த சந்தேகம் ஏற்படுவது கிடையாது.

இந்த மருந்து மோசடியில் மருந்து விற்பனையாளர்களை மட்டும் குறி வைக்காமல்,​​ சிறிய அளவிலான மருத்துவமனைகளையும்,​​ டாக்டர்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று மருந்து விற்பனையாளர்கள் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

விசாரணையில்...:​​ மோசடி தொடர்பாக காவலில் உள்ளவர்களிடம் நடைபெற்று வரும் விசாரணையில் இதில் டாக்டர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளன.

இத் தகவல்கள் தொடர்பான மேல் விசாரணையின் அடிப்படையில் இதில் தொடர்புள்ள டாக்டர்கள் மீது போலீஸôரின் நடவடிக்கை இருக்கும் என போலீஸôர் தெரிவித்தனர்.​

இதையடுத்து இந்த வழக்கில் டாக்டர்களும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

மார்ச் 27, 2010

சென்னை: காலாவதியான மருந்து, மாத்திரைகளை புதியது போல மாற்றி விற்கப்படும் மோசடி [^] அம்பலமானதை அடுத்து, பொதுமக்கள் மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மருந்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கியதற்கு கடைக்காரர்களிடம் இருந்து ரசீது கேட்டுப் பெற வேண்டும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் [^] செய்ய வேண்டும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும். மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

மற்றவர்களுடைய நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம்.

அல்லது 044 24338421, 24328734, 24310687, 24351581 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விளங்கங்கள் பெறலாம் என மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.

மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தொடரும்

இதற்கிடையே, காலாவதியான மருந்துகளை விற்றவர்கள் மீதான அரசின் நடவடிக்கை தொடரும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கு.​ சுப்புராஜ் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதுபற்றி குறிப்பிடுகையில்,

'காலாவதியான மருந்துகள் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.​ ஏனெனில் இது குறித்த அரசின் நடவடிக்கை தீவிரமாக தொடரும்.​

இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ தலைமறைவான நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காலாவதியான மருந்துகளை வைத்திருக்கும் மருந்துக் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள மருந்துகளை ஓரிடத்தில் வைத்து அதில் விற்பனைக்கு அல்ல என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.​

அந்த மருந்துகளை அந்தந்த மருந்து நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி விட வேண்டும்.​ இந்த விவகாரம் குறித்து மருந்து விற்பனையாளர்களும் பயப்படத் தேவையில்லை' என்றார்.

மேற்கண்டவற்றை படித்து உங்களுக்கு விவகாரமாக எதாவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்


மறக்காம வோட்டுப் போடுங்க


சனி, 20 மார்ச், 2010

அணு சக்தி ஒப்பந்தம்

அன்புடைய வலைப்பூ வாசகர்களுக்கு

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது.
ஆகவே நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க கீழ் கண்ட சுட்டியை சொடுக்கி கிரீன்பீஸ் தளத்தின் மூலம் ஒரு பெட்டிஷன் மனுவை நம்முடைய பிரதமருக்கு அனுப்பலாம்.

அன்புள்ள வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களால் முடிந்த அளவிற்கு இந்த விசயத்தை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இடுகையை முழுவதும் படிக்க இங்கே சொடுக்கவும்

Hello blog reader, Our government (India) is churning out one hazardous bill after another. This time it is a bill called the Civil Liability for Nuclear Damage, and it's coming up for a vote in a couple of days.
The bill lets U.S. corporations off the hook for any nuclear accidents they cause on Indian soil. They'd only have to pay a meagre amount, and Indian taxpayers would be stuck paying crores for the nuclear clean up and to compensate the victims.
Without any public debate, the Prime Minister is appeasing American interests and ignoring our safety.
Greenpeace is launching a petition asking the PM to hold a public consultation before introducing the bill.
I have already signed this petition. Can you join me?

Please Save India - http://www.greenpeace.org/india/stop-the-vote

மறக்காம வோட்டுப் போடுங்க


திங்கள், 15 மார்ச், 2010

Railway Recruitment Board Invites Applications For Various Positions

இந்தியன் ரயில்வே கீழ் கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

1. Staff Nurse : 468 posts

2. Health and Maleria Inspector Gr. II : 430 posts

3. Pharmacist Gr. III : 136 posts

4. Physiotherapist : 10 posts

5. Lab Assistant – II : 37 posts

6. Audiologist cum Speech Therapist : 01 post

7. Lab Superintendent Gr. III : 22 posts

8. Radiographer : 47 posts

9. Haemodialysis/ Dialysis Technician : 05 posts

10. Perfusionist : 02 posts

11. Cath. Lab Technician : 05 posts

12. Cardiology Technician : 01 post

13. Occupational Therapist : 02 posts

14. Lady Health Visitor : 01 post

15. Dietician : 02 posts

16. Refractionist : 01 post

17. Dental Hygienist (Oral Hygienist) : 07 posts

18. Distrcit Extension Educator : 03 posts

19. Field Worker : 07 posts

20. ECG Technician : 03 posts

21. Lab Assistant Gr.III (Medical) : 06 posts

22. Lab Technician Gr. II : 01 post

Application Fee : Rs.60/- or Rs.40/- as the case may or different posts in the form of IPO / DD in favour of Assistant Secretary of concerned RRB where candidate wants to apply.

How to Apply : Application in the prescribed format should be send to the Member Secretary of the concerned RRB where candidate want to apply on or before 13/04/2010. Candidates can also apply online at respective RRB websites.

The detailed advt. is published in the Employment News dated 13/03/2010 and it is also available at the websites of all the Railway Recruitment Boards (RRBs). Click here for the list of all RRB websites.

மறக்காம வோட்டுப் போடுங்க


புதன், 10 மார்ச், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - Women's reservation bill

திங்கள், 7 மார்ச் 2010

மக‌ளி‌ர் இடஒது‌க்‌கீடு மசோதா மா‌நில‌ங்களவை‌யி‌ல் நாளை தா‌க்க‌ல்


பெ‌ண்களு‌க்கு 33 சத‌வீத இடஒது‌க்‌கீடு வழ‌ங்கு‌ம் மசோதா மாநிலங்களவையில் நாளை ‌தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

மாநிலங்களவையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. எனவே இந்த மசோதா நிறைவேற பா.ஜ.க ஒத்துழைப்பு அளிப்பதென முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நே‌ற்று நட‌ந்த பா.ஜ.க தலைவர் கூட்டிய கூட்டத்தில், மகளிர் மசோதாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதென்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது என்று தே‌சிய‌த் தலைவ‌ர் கட்கரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக மாநிலங்களவை பா.ஜ.க கொறடா, தனது கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். மகளிர் மசோதா அறிமுகம் ஆகும்போது அனைத்து பா.ஜ.க உறுப்பினரும் அவையில் இருந்து அது நிறைவேற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போதைய வடிவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக எதிர்ப்போம் என சமா‌ஜ்வாதி கட்சி‌த் தலைவ‌ர் முலாய‌ம்‌ சி‌ங் யாத‌வ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இத‌னிடையே ம‌க‌ளி‌ர் மசோதாவை ஆதரிப்பதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவுக்கும், அக்கட்சியைச் சேர்ந்தவரும், ‌பீகார் முதலமை‌ச்சருமான நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

திங்கள், 8 மார்ச் 2010( 11:20 IST )

மாநிலங்களவை 12 மணி வரை தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்ற பரபரப்புடன் துவங்கிய மாநிலங்களவை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நண்பகல் 12 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை இன்று துவங்கியதும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த அறிக்கையை மத்திய அரசு ஏன் அமல்படுத்தவில்லை என்று சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி கோஷமிட்டனர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை மதியம் 12 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 12:33 IST )

மகளிர் மசோதாவில் மாற்றம் கோரி அமளி: மக்களவை தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில், பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்

இதன் காரணமாக மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை மதியம் 2 மணி வரை தள்ளிவைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 14:04 IST )

மத்திய அரசுக்கான ஆதரவு: சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாபஸ்


மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஏற்காத காரணத்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உள்ஒதுக்கீடு இன்றி நிறைவேற்றுவது அரசியல் ஏமாற்றுத்தனம். இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திருமப் பெறுகிறோம்” என்றார். அப்போது முலாயம் சிங் உடனிருந்தார்.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில், பிற்படுத்தப்பட்டோர், தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கோரியிருந்தன. ஆனால் அதனை ஏற்காத மத்திய அரசு மகளிர் மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

மக்களவையில் சமாஜ்வாடிக்கு 21 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை இரு கட்சிகளும் விலக்கிக் கொண்ட போதிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலம் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 8 மார்ச் 2010( 15:27( 11:20 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: நாடாளுமன்றம் தள்ளிவைப்பு


மக்களவை, சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவை, மாநிலங்களையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் மாலை 4 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முக்கிய எதிர்க்கட்சியான பாஜக ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள போதிலும், அந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தலித் இனப் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவை நடவடிக்கைகள் மாலை 4 மணி வரை தள்ளி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திங்கள், 8 மார்ச் 2010( 15:45 IST )

மாநிலங்களவையில் அமளி: அன்சாரியிடம் அமைச்சர்கள், தலைவர்கள் மன்னிப்பு


மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது மரியாதைக் குறைவான முறையில் நடந்து கொண்டதற்காக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மன்னிப்புக் கோரினர்.

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை அன்சாரி தள்ளி வைத்தார்.

இதையடுத்து, அவையில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட காரணத்திற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, ப்ரித்விராஜ் சௌஹான், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் மன்னிப்புக் கோரினர்.

இதேபோல் மாயா சிங் (பாஜக), சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், டி.ராஜா, கரண் சிங், ராஜிவ் சுக்லா (காங்.), மைசுரா ரெட்டி (தெலுங்கு தேசம்), பரத் குமார் ரௌத் (சிவசேனா), டி.சிவா (திமுக) ஆகியோரும் அன்சாரியை சந்தித்து மன்னிப்புக் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 8 மார்ச் 2010( 16:22 IST )

மக்களவை நாளை வரை தள்ளிவைப்பு: மாநிலங்களவையில் 6 மணிக்கு வாக்கெடுப்பு


நாடாளுமன்றம், சட்டப் பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவின் மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக, இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் நாளை காலை வரை அவை நடவடிக்கைகளை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 20:35 IST )

மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தாமல் வாக்களிக்க மாட்டோம்: பாஜக


மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடத்தப்படாவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என பாஜக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மாநிலங்களையில் இன்று மதியம் 2 மணிக்கு மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தலித் இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாநிலங்களவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல், குழப்பம் நீடித்ததால் அவை நடவடிக்கைகள் மாலை 6 மணி வரை தள்ளிவைப்பதாகவும், மாலை 6 மணிக்கு மேல் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய பாஜக, மசோதா மீது விவாதம் நடத்தாமல் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவைத் துணைத்தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த (மகளிர்) மசோதாவை தாக்கல் செய்வதில் மத்திய அரசு உரிய வரையறையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த மசோதா மீது விவாதம் நடத்தாமல் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மசோதா மீது நிச்சயம் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

திங்கள், 8 மார்ச் 2010( 18:40 IST )

மாநிலங்களவையில் அமளி: மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீது மாநிலங்களவையில் இன்று நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. முன்னதாக அவை நடவடிக்கையின் போது அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மசோதா நகலை கிழித்து எறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயன்றதால் அமளி ஏற்பட்டது.

மாநிலங்களை ஒவ்வொரு முறை கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாலை 6 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தாமல் வாக்களிப்பு நடத்தினால் அதில் பங்கேற்க மாட்டோம் என பாஜக அறிவித்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு மக்களவை கூடிய, ஒரு சில நிமிடங்களில் மகளிர் மசோதா மீதான வாக்கெடுப்பை தள்ளிவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

திங்கள், 8 மார்ச் 2010( 19:17 IST )

மகளிர் மசோதா: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மன்மோகன் ஏற்பாடு


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் கடும் அமளி காரணமாக வாக்கெடுப்பு நடத்த முடியாமல் அவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பா.ஜனதா, சிபிஐ - எம், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

அப்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற அவர்களது ஒத்துழைப்பை கோரினார்.

மேலு இம்மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக நாளை அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தாம் கூட்டி உள்ளதாகவும், இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களை மன்மோகன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற வேண்டும் என தமது கட்சி விரும்பும் அதே சமயத்தில் நாடாளுமன்ற மரபுகளும் மதிக்கப்பட வேண்டும் என கருதுவதாகவும் கூறினார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 09:57 IST )

காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மேலிடம் உத்தரவு


இன்றைய மாநிலங்களவை நடவடிக்கையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான வாக்கெடுப்பு கடும் அமளியின் காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இன்று வாக்கெடுப்பு நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று தவறாமல் மாநிலங்களவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என நேற்று மாலை கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 9 மார்ச் 2010( 10:42 IST )

சரத் யாதவ், லாலு, முலாயம் பிரதமருடன் சந்திப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று புதுடெல்லியில் சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அனைவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய சரத் யாதவ், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என்றார்.

லாலு பிரசாத் கூறுகையில், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பற்றி விவாதிக்க வேண்டும்” என்றார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 11:31 IST )

மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு: மாநிலங்களவை தள்ளிவைப்பு


நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை இன்று காலை துவங்கியதும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, “உறுப்பினர்களின் நடவடிக்கை கவலையளிக்கிறது” என்று கூறி அவை நடவடிக்கைகளை மதியம் 12 மணிவரை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 11:51 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு: முலாயம், லாலுக்கு அமர் சிங் எச்சரிக்கை


பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் யாதவத் தலைவர்கள், நாட்டில் உள்ள பெண்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அமர் சிங் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது வலைப்பூவில் அமர் சிங் வெளியிட்டுள்ள கருத்தில், “யாதவ தலைவர்களே, பெண்கள் சக்தியை வீணாக கோபப்படுத்தாதீர்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது” எனக் கூறியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றும் விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சிகள் விலக்கிக் கொண்டதற்கும் அமர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சியில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த அமர் சிங், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 12:47 IST )

மகளிர் மசோதாவைக் கிழித்த 7 எம்.பி.க்கள் நீக்கம்: ஹமீத் அன்சாரி அதிரடி


மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிழித்தெறிந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்களை தற்காலிமாக நீக்குவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கிடைக்க வகை செய்யும் மகளிர் மசோதாவை மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவைக் கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று மசோதாவை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இஜாஸ் அலி, சுபாஷ் யாதவ், சபிர் அலி, நந்த் கிஷோர் யாதவ், கமல் அக்பர், அமிர் ஆலம் கான், வீர்பால் சிங் யாதவ் ஆகியோரை தற்காலிகமாக நீக்குவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி இன்று அறிவித்தார்.

நேற்றைய மாநிலங்களவை நடவடிக்கையின் போது ஹமீத் அன்சாரி மேஜையில் இருந்து ஒலிப்பெருக்கியைப் பிடுங்கி அவைத் தலைவரைத் தாக்க கிஷோர் யாதவ் முயன்றது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 12:37 IST )

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றம் 2 மணி வரை தள்ளிவைப்பு


மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவர் மீரா குமாரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:15 IST )

மகளிர் ஒதுக்கீட்டை எதிர்த்து அமளி: மக்களவை 3 முறையாக தள்ளிவைப்பு


நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவை எதிர்த்து சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 3 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மக்களவை கூடியதும் சட்ட வரைவை எதிர்க்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து எதிர்ப்பு முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளை சிறுது நேரத்திற்கு மக்களவைத் தலைவர் மீரா குமார் தள்ளிவைத்தார்.

அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை தொடர்ந்தது. எதிர்ப்பு முழக்கங்களுக்கு இடையிலும் கேள்வி நேரம் நடத்தினார். ஆனால் சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் உரத்த குரலில் முழங்கியதால் அவை நடவடிக்கைகளை மீண்டு்ம் தள்ளிவைக்கப்பட்டது.

அதன் பிறகு, 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், இராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் ஆகியோரும் தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்ப்பு முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகளை 3வது முறையாக பிற்பகல் 2 மணி வரை மீரா குமார் தள்ளி வைத்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:42 IST )

இரு அவைகளும் 4வது முறையாக தள்ளிவைப்பு


மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை, மக்களவை நடவடிக்கைகள் இன்று 4வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவை எதிர்த்து சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகளை 4 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

இதேபோல் மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய போதும் மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை மாலை 3 மணி வரை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 17:58 IST )

மகளிர் மசோதா: மம்தா கட்சி வாக்களிக்காது


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்காது என்று தெரிகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இம்மசோதா மீதான பிரச்னை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்த நிலையில், திடீரென மகளிர் மசோதா வாக்கெடுப்புக்கும், விவாதத்திற்கும் எடுத்துக்கொளப்பட்டதால், தமது கட்சி உறுப்பினர்களை அவையில் கலந்துகொள்ளும்படி தம்மால் தகவல் தெரிவிக்க முடியாமல் போய்விட்டதாகவும், எனவே வாக்கெடுப்பில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவரது இந்த முடிவு ஐமுகூ அரசுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

செவ்வாய், 9 மார்ச் 2010( 19:47 IST )

மகளிர் இடஒதுக்கீடு சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேறியது!


நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேறியது.

மகளிர் இடஒதுக்கீடு மீது நடந்த விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி வாக்கெடுப்பு நடத்தினர்.

இதில், மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்து 186 வாக்குகள் பதிவாகின. எதிர்த்து ஒரு வாக்கு பதிவானது.

மூன்றில் இரண்டு விழுக்காடு வாக்குகள் ஆதரவாக பதிவானதையடுத்து மகளிர் இடஒதுக்கீடு சட்ட வரைவு நிறைவேறியதாக மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி அறிவித்தார்.

செவ்வாய், 9 மார்ச் 2010( 14:54 IST )

மன்மோகன், சோனியாவுடன் முலாயம், லாலு சந்திப்பு


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் லாலு பிரசாத், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோர் பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்து தங்களின் எதிர்ப்புக்கான விளக்கத்தை அளித்தனர்.

நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்லை. மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்த மசோதா மீதான வாக்கெடுப்பும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் அவர்கள் மூவரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து பேசினர்.

மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மதியம் சந்திப்பு நடத்தினார்.

பிரதமர் உடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அகமது படேல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ஆகியோரும் உடனிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 10 மார்ச் 2010( 08:27 IST )

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் கடிதத்தை குடியரசு தலைவ‌ரிடம் கொடுக்கிறார் லாலு


மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் கடிதத்தை குடியரசு தலைவ‌‌ர் ‌பிர‌தீபா பா‌‌ட்டீ‌லிட‌ம் இ‌ன்று ரா‌ஷ்டி‌‌ரீய ஜனதாதள‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் லாலு ‌பிரசா‌த் யாத‌வ் கொடு‌க்‌கிறா‌ர்.

நானும், முலாயம் சிங்கும் பிரதமரை சந்தித்த போது, தற்போது உள்ள நிலையிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம் எ‌ன்று‌ம் எங்களுடைய வேண்டுகோளையும் மீறி மசோதாவை மா‌நில‌ங்களவை‌யி‌ல் அரசு நிறைவேற்றி இருக்கிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

எனவே குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீலை இ‌ன்று சந்தித்து, மத்திய அரசுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை கொடுக்க இருக்கிறேன் எ‌ன்று லாலு பிரசாத் கூறினார்.

நன்றி வெப்துனியா.காம்

இத்துடன் எனது முந்தைய இடுகையையும் படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
இடுகையை படிக்க இங்கே சொடுக்கவும்.

மறக்காம வோட்டுப் போடுங்க


பேரபாயம் காத்திருக்கிறது...!

தலையங்கம்
தலையங்கம்:பேரபாயம் காத்திருக்கிறது...!

First Published : 09 Mar 2010 12:48:00 AM IST

Last Updated : 09 Mar 2010 02:48:57 PM IST

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

மறக்காம வோட்டுப் போடுங்க